முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மர்மமாக உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போனை தீவிரமாக தேடும் காவலர்கள்

வியாழக்கிழமை, 9 மே 2024      தமிழகம்
Cong 2024-05-04

நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போன அவரது செல்போனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவர், காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட மே 2-ஆம் தேதி, திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் டார்ச் லைட் வாங்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து கடைக்காரரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், டார்ச் லைட் வாங்க வந்தபோது ஜெயக்குமாரின் முகத்தில் எவ்வித பதற்றமும் இல்லையென்றும், சிரித்த முகத்துடனே காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்த பிறகு எரித்தால்தான் குரல்வளை முற்றிலும் எரியும் என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட அவரின் தோட்டத்தில் இருந்தும் சில பொருள்களை கைப்பற்றி எந்தவகையான எரிபொருள் எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஜெயக்குமாரின் காணாமல் போன செல்போன் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவலர்கள், அதனை தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு எந்தெந்த டவர்களில் இருந்து போன்கள் வந்துள்ளது என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். ஜெயக்குமாரின் முழு உடற்கூறாய்வின் அறிக்கை கிடைத்தால் மேலும் பல முடிச்சுகள் அவிழும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து