முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகாசஸ் விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் - சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் ரிட் மனுக்கள் மீது 2 அல்லது 3 நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் அரசு தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக ஏற்படுத்தியது. 

மத்திய அரசு உரிய விளக்கம் தரக் கோரி ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேலும் மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்நிலையில்,  மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள தேவையான, நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வாய்ப்புகள் வழங்கியும் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர் குழுவை அமைக்க தயாராக இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் ரிட் மனுக்கள் மீது 2 அல்லது 3 நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து