முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பு ; கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : பெங்களூருவில், சாரக்கி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து தள்ளி, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 34 ஏக்கர் நிலங்களை, அரசு அதிரடியாக மீட்டுள்ளது.

பெங்களூரு பகுதிகளில் உள்ள பல ஏரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில் சிக்கி உள்ளன. இதை மீட்கும் நடவடிக்கையில், அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இட்டமடு ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றிய மாவட்ட நிர்வாகம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சட்ட விரோதமான வீடுகள், வர்த்தக கட்டடங்கள், கல்லுாரி கட்டடங்களையும் இடித்து தள்ளியது.

நேற்று காலை 8:00 மணிக்கு, சாரக்கி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. போலீசார் பாதுகாப்புடன், 34 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீடுகள், வர்த்தக கட்டடங்கள் என, பலவகை கட்டடங்களையும், வருவாய்த் துறை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.ரூ.2,000 கோடி:ஏரியின் மொத்த பரப்பளவு, 82 ஏக்கர்; இதில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 34 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன; இவற்றை அதிகாரிகள் மீட்டனர்.ஆக்கிரமிப்பு பகுதியில், மருத்துவமனை, இரண்டு கல்லுாரிகளும் இயங்கி வந்தது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. சாரக்கி ஏரியில், 168 வீடுகள் உட்பட, பல கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

சட்ட விரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியவர்கள், நீதிமன்றத்தில் முறையிட்டு, தடை உத்தரவு பெற்று வந்துள்ளனர். இதனால், தற்போதைக்கு இந்த குடியிருப்பு மட்டும் தப்பி உள்ளது.சாரக்கி ஏரி எல்லைக்குட்பட்ட, ஜரகனஹள்ளி, புட்டேனஹள்ளியில், நிலத்தை, சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, வீடு, வர்த்தக கட்டடங்களை கட்டியவர்களின் தகவல்கள் சேகரித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று பெங்களூரு நகர கலெக்டர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து