எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வு நடந்து வரும் நிலையில், ஈயம் - பித்தளையில் செய்யப்பட்ட கவரிங் நகைகளை அடகு வைத்தும், ஒரே நபர்கள் நூற்றுக்கணக்கில் நகைக்கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியான பயனாளிகளை கண்டறிய மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் பெற்றவர்களின் விபரங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் நகைக்கடன் பெறுவதில் பலவிதமான மோசடிகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைக்காமலேயே வைத்தது போல் கணக்கு காட்டி சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அதன் நிர்வாகக் குழு இயக்குநரான கிருஷ்ணசாமி என்பவர் மட்டும் 10 பொட்டலங்களில் ஈயம், பித்தளையில் செய்த கவரிங் நகைகளை வைத்து 11 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றது தெரியவந்துள்ளது.
குமரி மாவட்டம்
எப்படியும் நகைக்கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அதிகாரிகள் துணையுடன் குமரி மாவட்டம் கீழ்குளத்தில் ஒரே நபர் 5 சவரனுக்கு உட்பட்டு 625 நகைக்கடன்கள் மூலம் ஒன்றேகால் கோடி ரூபாயை நகைக்கடனாக பெற்றிருந்ததும், அதே சங்கத்தில் மற்றொரு நபர் 647 நகைக் கடன்கள் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சேலம் மற்றும் தருமபுரி
சேலம் காடையம்பட்டி மற்றும் தருமபுரி பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபர் 2.42 கிலோ நகைகளை அடகு வைத்து 72லட்சம் ரூபாய்க்கு 384 நகைக்கடன்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் 614 நகைக்கடன்கள் மூலம் 1கோடியே 63லட்சம் ரூபாய் கடனும், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 641 நகைக் கடன்கள் மூலம் 2கோடி ரூபாய் அளவுக்கும் கடன் பெற்றிருக்கின்றனர். ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தியும் 600-க்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு கடன் திருவண்ணாமலையில் பெறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபருக்கு 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
உசிலம்பட்டி
வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஏழைகளுக்கான அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை பயன்படுத்தி மதுரை மாவட்டம் பாப்பையாபுரம், சுந்தரலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 70லட்சம் ரூபாய்க்கு 300 நகைக்கடன்கள் வழங்கியதும், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 கிலோவிற்கும் அதிகமான நகைகளை அடகு வைத்து 82லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகையைச் சேர்ந்தவரின் குடும்ப அட்டையை வைத்து மதுரை உசிலம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ஒரு கிலோ நகைகளை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நகை அடகுகடைக்காரர் ஒருவர் கூட்டுறவு வங்கியில் 25 நகைக்கடன் பெற்றதும், மேலும் பல இடங்களில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்கி வெளியில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இப்படி வழங்கப்பட்ட பெரும்பாலான நகைக்கடன்கள் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி சலுகையை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பெறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட ஈயம் பித்தளை நகைகளுக்கு எல்லாம் நகை கடன் வழங்கிய கூட்டுறவு வங்கி அதிகாரிகள், நல்ல வேளையாக பழைய இரும்புக்கு நகை கடன் வழங்கவில்லை என்பது தான் ஆறுதலான விஷயம்.
இந்த மோசடிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் விவகாரம்: நயினார் நாகேந்திரன்
23 Aug 2025சென்னை : தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்
23 Aug 2025காலி : கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
அமெரிக்காவில் விபத்து: 5 இந்தியர்கள் காயம்
23 Aug 2025நியூயார்க் : அமெரிக்காவில் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுக்கு கர்நாடக கோரிக்கை
23 Aug 2025பெங்களூரு : மேகதாது அணை விவகாரத்துக்கு தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கர்நாடகாவில் கனமழை
23 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை; சிரியாவை சேர்ந்தவர் கைது
23 Aug 2025காந்திநகர் : காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
-
விஜய்க்கு பா.ஜ.க. வேண்டுகோள்
23 Aug 2025சென்னை : மக்கள் நல அரசியல்வாதியாக விஜய் மாற வேண்டும்: பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
மருத்துவ துறையில் 6 ஆயிரம் பணியிடங்கள்: தொகுப்பூதித்தில் நிரப்ப செவிலியர்கள் எதிர்ப்பு
23 Aug 2025கும்பகோணம் : நோய் தடுப்பு மருந்து துறையில் 6 ஆயிரம் செவிலியர்கள் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
டி20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வீரர் இம்ரான் தாஹிர் புதிய சாதனை
23 Aug 2025ஆன்டிகுவா : டி20 கிரிக்கெட்: 46 வயதில் 5 விக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்தார் இம்ரான் தாஹிர்.
-
துலீப் டிராபி தொடரை தவறவிடும் சுப்மன் கில்
23 Aug 2025மும்பை : துலீப் டிராபி தொடரை சுப்மன் கில் தவறவிட்டார்.
-
கடைசி ஒருநாள் போட்டி: ஆஸி. - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
23 Aug 2025மெக்காய் : கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
-
முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் - விளக்கம் அளித்த ஆர்.சி.பி.
23 Aug 2025பெங்களூரு : முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது ஆர்.சி.பி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.