எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை முன்னிட்டு முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை கடந்துள்ளது.
இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். ஜப்பானை விட ஐந்து மடங்கு, ஜெர்மனியை விட ஒன்பது மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று மத்திய அரசு வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்து உள்ளது.
எட்டுமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். ஜம்மு -காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம், தத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, கோவா மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முதல் டோஸ் தடுப்பூசி 90 சதவீதத்தை எட்டி உள்ளன.
தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தால் கடந்து வந்த மைல்கற்களை மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 85 நாட்களில் முதல் 10 கோடி (100 மில்லியன்) டோஸ் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி உள்ளது.
கோவின் - டிஜிட்டல் தளத்தில் இதுவரை 76 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். நாட்டின் தொலைதூர மூலைகளுக்கு தடுப்பூசிகளை வழங்க இந்தியா முதன்முறையாக டிரோன்களைப் பயன்படுத்தியது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 17 அன்று (பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள்) ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு தடுப்பூசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு மணி நேரத்திற்கு 15.62 லட்சம் டோஸ் அல்லது நிமிடத்திற்கு 26,000 டோஸ் அல்லது ஒவ்வொரு நொடியும் 434 டோஸ் என கணக்கிடப்பட்டு உள்ளது. வெறும் ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டாலும், போலியோ தடுப்பூசி (1994-2014) மைல்கல்லை கடக்க 20 ஆண்டுகள் ஆனது. சீனா மட்டுமே இதுவரை 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. (மேலும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது). சீனா ஜூன் மாதம் மைல்கல்லை தாண்டியது.
இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 99 கோடியே 85 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. அதில் முதல் டோஸ் ஊசியை 70 கோடியே 56 லட்சம் பேரும். 2-வது டோஸ் தடுப்பூசியை 29 கோடியே 28 லட்சம் பேரும் போட்டு இருந்தனர். நேற்று காலை வழக்கம் போல முகாம் தொடங்கியது. ஏராளமானோர் வந்து தடுப்பூசி போட்டனர். நேற்று காலை 9.40 மணி நிலவரப்படி தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 100 கோடி டோசை கடந்தது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் இந்தியா; 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி. இந்த சாதனையை எட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த விழாவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த பணி வெற்றிகரமாக அமைய உதவிபுரிந்த சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். டெல்லி செங்கோட்டை யில் நடந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட பாடலை வெளியிட்டார். மேலும் இது சம்பந்தமான பட காட்சிகள் கொண்ட வீடியோவும் தயாரிக்கப்பட்டு இருந்தது. அதையும் அவர் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இத்துடன் வாராந்திர சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரத்து 307 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், ''100 கோடி தடுப்பூசி என்ற சாதனை இலக்கை, 9 மாதங்களில் நாம் அடைந்திருக்கிறோம். இதுவரை, 75% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசியை செலுத்த முயற்சிக்க வேண்டும். இதுவரை 30 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் 10 கோடி பேர், இரண்டாவது தவணைக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் அதனை செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இரண்டாவது டோஸை தவறவிட்டவர்களைக் கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.