முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆர்.இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தைவிட 131% அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் நேற்று சோதனை நடைபெற்றது. ஆர்.இளங்கோவன் மகன் பிரவீன் குமார், திருச்சியில் உள்ள கல்வி அறக்கட்டளை ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார். அங்கும் சோதனை நடைபெற்றது. அதேபோல் கரூரில் உள்ள இளங்கோவனின் சகோதரி வீட்டிலும் ரெய்டு நடந்தது.

முன்னாள் அமைச்சர்களைத் தொடர்ந்து இளங்கோவன் ரெய்டில் சிக்கியுள்ளார். ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் தற்போது அதிமுகவுக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன் சோதனை வளையத்துக்குள் தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது சேலம் வீடு, திருச்சியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் கரூரில் உள்ள உறவினர்களின் வீடுகள், சென்னை மற்றும் நாமக்கல் என மொத்தம் 27 இடங்களில் நேற்று ரெய்டு நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து