முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்யன்கான் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் : மும்பை ஐகோர்ட்டில் என்.சி.பி. தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்துபவர் மட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டதாக மும்பை ஐகோர்ட்டில் என்.சி.பி. தெரிவித்துள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்யன்கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மும்பை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்துவர் மட்டுமல்ல அவர் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவும் ஆர்யன் கான் முயற்சித்துள்ளார். இதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஐகோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து