எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் வெற்றியை தடுத்த இரண்டு காரணங்களில் ஒன்று போதிய வெளிச்சம் இல்லாமை என்றாலும், மற்றொரு முக்கியமான காரணம் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திர மற்றும் அஜஸ் படேல் ஆகிய இரண்டு வீரர்களின் தடுப்பாட்டமே இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம்.
165 ரன்கள்...
284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தபோது வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் தோல்வியின் பிடியில் இருந்த நியூஸிலாந்து அணி இயற்கையின் உதவியால், தோல்வியிலிருந்து தப்பித்தது. ஆட்ட நாயகனாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
13-வது போட்டி...
நியூஸிலாந்து தரப்பில் ரவிந்திரா 18, பட்டேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-0 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன. இந்திய அணி கடந்த 1988 முதல் 1994-ம் ஆண்டுவரை உள்நாட்டில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து முடிவு கிடைத்தவாறு இருந்தது. அதற்கு அடுத்தாற்போல், 2018-ம் ஆண்டு முதல் 2021, மார்ச் 4-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரை 12 போட்டிகளிலும் முடிவு கிடைத்தது. 13-வது டெஸ்ட் போட்டியிலும் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது, இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
284 ரன்கள் இலக்கு...
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 284 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் இருந்த சோமர்வில்லே, டாம் லாதம் நேற்று கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.
உமேஷ் யாதவ்...
இருவரும் இந்தியப் பந்துவீச்சாளர்களை சோதிக்கும் வகையில் பேட் செய்ததால் விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். சோமர்வில்லே 36 ரன்கள் சேர்த்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 76 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அஸ்வின் பந்துவீச்சு...
அடுத்து ரோஸ் டெய்லர் களமிறங்கி லாதமுடன் சேர்ந்தார். அரை சதத்தைக் கடந்து ஆடி வந்த லாதம் 52 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி அதன்பின் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரோஸ் டெய்லர் 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த நிகோலஸ் ஒரு ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். நிலைத்து ஆடிவந்த கேப்டன் வில்லியம்ஸன் 24 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியன் திரும்பினார்.
நியூசி.க்கு நெருக்கடி...
பிளன்டெல் (2), ஜேமிஸன் (5) சவுதி (4) என ஜடேஜாவின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 37 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளைச் சீரான இடைவெளியில் இழந்தது. கடைசி விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என்ற ஆர்வத்தில் இந்திய அணியினர் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் கடைசி சில ஓவர்கள் முன்பாகவே முடிக்கப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் இன்றி டிராவில் முடிந்தது.
ஜடேஜா - அஸ்வின்...
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி செஷனில் சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இயற்கையின் தடையால் வெற்றிபெற முடியவில்லை. இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து இந்திய அணியின் பவுலர்கள் அக்சர் பட்டேல் 6 விக்கெட், அஷ்வின் 6 விக்கெட், ஜடேஜா 5 விக்கெட், உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
2 முக்கிய காரணங்கள்
இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு விக்கெட்டை இந்திய அணியின் பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. கடைசி நாள் ஆட்டத்தில் முதல் செஷனில் இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது போட்டி சமனில் முடிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றியை தடுத்த இரண்டு காரணங்களில் ஒன்று போதிய வெளிச்சம் இல்லாமை என்றாலும், மற்றொரு முக்கியமான காரணம் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திர மற்றும் அஜஸ் படேல் ஆகிய இரண்டு வீரர்களின் தடுப்பாட்டமே இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம்.
மேலும் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய பத்து டெஸ்ட் போட்டிகளில் (இந்த போட்டியையும் சேர்த்து) ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் முன்கூட்டிய முடித்துக் கொள்ளப்பட்டது. ஒருவேளை நேற்றைய நாள் ஆட்டத்தில் எஞ்சியிருந்த ஓவர்களை இந்திய அணி வீசி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கலைமாமணி விருது முழு பட்டியல் அறிவிப்பு
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-09-2025.
24 Sep 2025 -
மதுரையில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
24 Sep 2025மதுரை : மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
கோவை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
24 Sep 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, தேனி உள்ளிட்ட
-
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது - ஜெலன்ஸ்கி
24 Sep 2025நியூயார்க் : இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவ
-
என் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிறைவேற்றுவேன்: கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
24 Sep 2025சென்னை, என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வ
-
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்
24 Sep 2025புதுடெல்லி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
-
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் சென்று விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
24 Sep 2025சென்னை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-
தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
24 Sep 2025கூடலூரி : தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக இந்தியா மீது அதிக வரி விதிப்பு : மார்கோ ரூபியோ தகவல்
24 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராக இந்தியா மீது ட்ரம்ப்
-
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பிரசாரம்
24 Sep 2025திருச்சி : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.
-
ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர்: சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
24 Sep 2025சென்னை, ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் என்று அமைச்சர் சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
24 Sep 2025புது தில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
-
பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
24 Sep 2025சென்னை : பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாக 881 பேர் விரைவில் நியமனம்
24 Sep 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர
-
தைவானில் தாக்கிய ரகாசா தீவிர புயல்: ஏரி உடைந்து 14 பேர் பலி - 124 பேர் மாயம்
24 Sep 2025தைபே : தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர்.
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம்-வன்முறை : இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
24 Sep 2025லே : லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தலைநகர் லே-யில் உள்ள பா.ஜ.க.
-
அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர்
24 Sep 2025பாரிஸ் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்: பல்வேறு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு
24 Sep 2025வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்
24 Sep 2025ராஞ்சி : சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.
-
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி திருத்தம் செய்ய கட்டணம் ரூ.75 ஆக உயர்வு
24 Sep 2025சென்னை : ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
24 Sep 2025சென்னை, திரைத்துறையில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
24 Sep 2025ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.