முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டர் நிறுவன புதிய சி.இ.ஓ.வின் வருடாந்திர சம்பளம் ரூ. 7. 49 கோடி

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் சி.இ.ஓ பதவியில் இருந்து அதன் நிறுவனர் ஜாக் டோர்சி  வெளியேறிய நிலையில் இந்தியரான பராக் அகர்வால் புதிய சி.இ.ஓ.-வாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் பராக் அகர்வாலின்  சி.இ.ஓ. பதவிக்குக் கிடைக்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. 

டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியில் அமர்ந்துள்ள பராக் அகர்வால் தனது வருடாந்திர சம்பளமாக ஒரு மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் ரூ.7. 49 கோடி) தொகையைப் பெற உள்ளார். இதே போல் 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை 4 வருடங்களுக்கு பெற உள்ளார்.

ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான சுந்தர் பிச்சை 281 (இந்திய மதிப்பில் ரூ.2,107 கோடி) மில்லியன் டாலரும், மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா 43 மில்லியன் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.322 கோடி),  அடோப் சாந்தனு நாராயண் 39.2 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.292 கோடி) டாலரும் சம்பளத்தைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருடன் ஒப்பிடுகையில்  பராக் அகர்வாலின்  சம்பளம் பல பங்கு குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து