முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி: வி.கே.சசிகலா உறுதி

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தொண்டர்களின் துணையுடன் தமிழக மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி, சென்னை தியாராய நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், நினைவு இல்லத்தைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, 

இந்த நன்னாளில் ஒற்றுமையாக இருந்து, எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும், தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கொண்டு வருவோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து