முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.தொண்டர்கள் எந்த சூழலிலும் தி.மு.க.விற்கு விலை போக மாட்டார்கள்: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

எந்த சூழலிலும் அ.தி.மு.க.தொண்டர்கள் தி.மு.க.விற்கு விலை போகமாட்டார்கள் என்று மதுரையில் நடந்த  உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

மதுரை பனகல் சாலையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனைகளை வழங்கி பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவர், அம்மா ஆகியோரின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் பெயரில் உள்ளாட்சித்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற வேண்டும். கழகத்தின் கொள்கைகளை கடைபிடிக்கின்ற வீரர்களுக்கு போட்டியில் வாய்ப்புகளை பெற்றுத்தரவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாநகருக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி அம்மா அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த எடப்பாடியார், துணை முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை மாநகர் மக்களுக்காக ஐந்தாயிரம்கோடி ரூபாய் செலவில் திட்டங்களை வழங்கி மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார்கள். இந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துசொல்லி வாக்குகள் கேட்க வேண்டும். தி.மு.க.வின் தில்லுமுல்லை முறியடிக்க வேண்டும். தி.மு.க.அரசு கடந்த 9 மாதங்களாக மக்களுக்கு எந்த புதிய திட்டத்தையும் தரவில்லை. மதுரையில் அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களைத்தான் தி.மு.க.அரசு தற்போது திறந்து வைத்துள்ளது. உள்ளாட்சித்தேர்தலை கருத்தில் கொண்டு தான் முதல்வர் ஸ்டாலின் ரூ. 500 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். அறிவித்த திட்டங்கள் பெரும்பாலானவை அம்மா அரசு ஒதுக்கிய நிதியில் கொண்டு வந்த திட்டங்கள் தான். உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு கேட்டு மக்களை சந்திக்கவும் 10 நாட்கள் தான் இருக்கிறது. ஆனால்  மறைமுக தேர்தலுக்கு 10 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இதில் இருந்தே தெரிகிறது  தி.மு.க.வின் சதி திட்டம். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை விலைகொடுத்து வாங்கலாம் என்று தி.மு.க.அரசு நினைக்கிறது. இதனை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. என்னவிலை கொடுத்தாலும் அ.தி.மு.க.தொண்டர்கள் தி.மு.க.விற்கு விலை போகமாட்டார்கள். மதுரை மாநகராட்சி அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். எடப்பாடியார், ஒ.பி.எஸ். கரங்களை வலுப்படுக்கின்ற வகையில் மதுரை மாவட்டம் என்றென்றும் அ.தி.மு.க.கோட்டை என்று நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை, மாநில மாணவரணி இணை செயலாளர் பா.குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப்பிரிவு செயலாளர் மாணிக்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன்,  மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் சோலைராஜா, பகுதி செயலாளர்கள் பைக்காரா கருப்பசாமி, ஜோசப் தனுஷ்லாஸ், கே.ஜெயவேல், முத்துவேல், ஏ.வி.எஸ்.பிரிட்டோ, கறிக்கடை முத்துகிருஷ்ணன், கே.வி.கே.கண்ணன், தளபதி மாரியப்பன், பாஸ்கரன், ஞானசேகரன், மற்றும் முன்னாள் மேயர் கு.திரவியம், இளைஞரணி ரபீக், இலக்கிய அணி ஆர்.கே.ரமேஷ், வக்கீல் அசோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து