முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மாபெரும் ஜவுளி பூங்கா அமைத்திட அனுமதி அளிக்க வேண்டும் : பியூஷ் கோயலிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2022      இந்தியா
CM-5 2022 04 01

Source: provided

புதுடெல்லி : தமிழகத்தில் மாபெரும் ஜவுளி பூங்கா அமைத்திட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லியில் மத்திய  அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, தமிழகத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு:- 

தமிழ்நாட்டிற்கு மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைத்திட அனுமதி அளிக்க வேண்டும்.  காலணி உற்பத்தி தொழிலில், புதிய உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்,  உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் உற்பத்தித்திறன் அதிகரிப்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உப்புத் துறையின் நிலங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு மாற்றுதல், எஃகு விலையைக் கட்டுப்படுத்துதல், புழுங்கல் அரிசிக்கு பச்சரிசி பரிமாற்றம், மத்திய அரசிடமிருந்து அரைக்கப்பட்ட அரிசிக்கு மானியம் கோருதல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்தார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து