எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் 4-வ நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். காவிரியில் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 29 ஆயிரத்து 964 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை 47 ஆயிரத்து436 கன அடியாக அதிகரித்தது . மேட்டூர் அணைக்கு நேற்று காலை 46 ஆயிரத்து 353 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை 112.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மேலும் உயர்ந்து 115.35 அடியானது. இதனால் ஒரே நாளில் சுமார் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் 2 நாட்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் உபரி நீரும் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரியில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மேட்டூர் நீர் தேக்க பகுதிகளில் உள்ள பண்ணவாடி பரிசல் துறை கோட்டையூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஒலி பெருக்கி, தண்டோரா மூலமாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாறும் காவிரியில் குளிக்கவோ, மீன் பிடிக்க செல்லவோ கூடாது எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காவிரி கரையில் முகாமிட்டிருந்த மீனவர்கள் மேடான பகுதிகளுக்கு தங்களது முகாம்களை மாற்றினர்.
மேலும் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட காவிரி கரையோர மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குசெல்லுமாறு மத்திய நீர் வளத்துறை ஆணையம் கோவை மண்டலம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் மே மாதங்களில் கடந்த 2011-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது . அதன்பிறகு நடப்பாண்டில் தான் மே மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து: தமிழக கவர்னர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Feb 2026சென்னை, அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்க ராணுவத்தளபதி குறித்த கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் விளக்கம்
24 Feb 2026வாஷிங்டன், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொ
-
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா-உக்ரைன் போா்
24 Feb 2026கீவ், ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.


