முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் தலைசிறந்த கம்ப்யூட்டர் கோடிங் நிபுணராக டெல்லி ஐ.ஐ.டி மாணவர் தேர்வு : 10,000 டாலர்கள் பரிசுத்தொகை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2022      இந்தியா
IIT-student 2022-06-05

Source: provided

புதுடெல்லி : டெல்லி ஐ.ஐ.டி. மாணவர் கலாஷ் குப்தா டி.சி.எஸ். நடத்திய கோட்-விட்டா போட்டியில் 10,000 டாலர்கள் பரிசுத் தொகை வென்றுள்ளார். 

டெல்லி ஐ.ஐ.டி. மாணவர் கலாஷ் குப்தா, டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய கோட்-விட்டா சவால் போட்டியின் 10-வது சீசனில் பங்கேற்று வென்றுள்ளார். அவருக்கு 10,000 டாலர்கள் (தோராயமாக ரூ.7.75 லட்சம்) பரிசுத் தொகை கிடைத்துள்ளது. குப்தா ஐ.ஐ.டி.யில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பாடப்பிரிவில் பயின்று வரும் மாணவர் ஆவார். முன்னதாக, 2018-ம் ஆண்டு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில், கலாஷ் குப்தா அகில இந்திய அளவில் 3-வது ரேங்க் பெற்றவர். 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கோட்-விட்டா சவாலில் 87 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் குப்தாவும் ஒருவர். உலகின் தலைசிறந்த கணினி கோடிங் குறியீட்டாளர்கள் பட்டியலில், பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 21 இந்திய மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் சிலி மற்றும் தைவானைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கோட்-விட்டா' போட்டி உலகின் மிகப்பெரிய கணினி கோடிங் போட்டியாக, கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்றுள்ளது. கம்ப்யூட்டர் புரோகிராமிங் கோடிங் என்பதை ஒரு விளையாட்டு போட்டியாக முன்னிறுத்த வேண்டுமென்பதை இலக்காக கொண்டு கோட்-விட்டா நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் சவாலான இந்த போட்டியில், கடினமான புரோகிராமிங் கேள்விகள் கேட்கப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து