முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
Ku--alam 2022 07 01

Source: provided

தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை துவங்கவில்லை. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் குற்றாலத்தில் தொடர் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் நேற்று மாலைக்கு மேல் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் சிறு சிறு கற்கள் மற்றும் மரத் துண்டுகள் விழுந்தன. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

நள்ளிரவுக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலையில் சாரல் மழை குறைவாக இருந்தது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து