முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூரண குணமடைந்தார் இயக்குனர் டி.ராஜேந்தர்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      சினிமா
Rajender 2022-07-06

Source: provided

சென்னை : மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார். மேலும் சில நாட்கள் அவர் அமெரிக்காவில் ஓய்வெடுத்த பின்னர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்க சென்றார். அங்கு அவரது மகன் சிம்பு உடனிருந்து டி.ராஜேந்தரை கவனித்துக் கொண்டார். 

இந்த நிலையில் டி.ராஜேந்தர் முற்றிலும் குணமாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில நாட்கள் அவர் அமெரிக்காவில் ஓய்வெடுத்த பின்னர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.    தற்போது சிம்பு தனது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை திரும்புகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து