முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

திண்டுக்கல் மாவட்டம் மருதாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை முதன்மை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநதி நீர்த்தேக்கத்திலிருந்து   120 நாட்களுக்கு இன்று 23-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடியும், பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடியும் ஆக மொத்தம் நாளொன்றிற்கு  90 கன அடிக்கு மிகாமலும் மற்றும் மீதமுள்ள 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 20 கன அடிக்கு மிகாமலும்  தண்ணீர் திறந்து விட அரசு  ஆணையிட்டுள்ளது.  இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 6583 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து