எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						Source: provided
சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் அலுவலகங்களில் பணி புரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர், 1.6.2022 அன்றைய நிலவரப்படி, மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து இருந்தால், அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடத்தி அனைவரும் பணியிட மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கலந்தாய்வானது வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வின் போது மாவட்டத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற அறிவுறுத்த வேண்டும். 01.06.2022 அன்றைய நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு / பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியப் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
பட்டியலில் உள்ளபடி மாறுதல் கலந்தாய்வின் போது கலந்து கொள்ள வேண்டிய பணியாளர்கள், கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிக்கப்படும். தங்கள் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும்போது மாவட்டத்திற்குள் பணியிடம் இல்லாத நிலையிலோ, பணியாளர் வேறு மாவட்டத்தைக் கோரும் போதோ, அப்பணியாளர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள, அவர்தம் பட்டியலை ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும்.
மேலும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அப்பணியாளர்களது பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பாரிவை (4)-ல் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேற்கண்ட மாறுதல் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலில் குறிப்பிடப்பட்ட நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வி வளாக அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் ஒரே அலகாக கருதி ஆணையரகத்தில் இணைப்பில் கண்ட பட்டியலில் குறிப்பிட்டவாறு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஒரே பணியிடத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிமாறுதல் கோரும்நிலையில் பணியாளரின் பதவியில் சேர்ந்த நாளினை முன்னுரிமையாக கருதப்பட வேண்டும்.
மூன்றாண்டு பணிமுடித்த பணியாளர்கள் கட்டாய மாறுதனுக்குத் தகுதியுடையவராய் இருந்த போதிலும் சில பணியாளர்கள் எதிர்வரும் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பாராயின்' மூன்றாண்டுகளுக்கான மாறுதல் அளிக்கத் தேவையில்லை.மேற்கண்ட விதிமுறைகளை தவறாது பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி செவ்வனே செயல்படுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2025.30 Oct 2025
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
-   
          தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய 
-   
          தங்கம் விலை உயர்வு30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது. 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
-   
          திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. 
-   
          விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க. 
-   
          33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
-   
          தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர்களாக 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்30 Oct 2025சென்னை, தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்களுக்கான பணி நியமன ஆணையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 






















































