முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு: மக்கள் நிம்மதி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புது டெல்லி ; இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 343பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த பல வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மேலும் 343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,71,562- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,263- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் 4 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,612- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.90 கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து