அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 'பியூன்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம். இதற்காக, பிறப்பு - இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகிறது. இதன் மூலம் மூலம், மக்கள்தொகைப் பதிவேடு, வாக்காளர் பதிவேடு, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து தரவு தளங்களையும் ஒன்றிணைக்க முடியும்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒன்றிய அரசு சில முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-1969-ன் கீழ் ஏற்கனவே பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிகளில் பணி நியமனம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக்கும் சட்டத்தை மேலும் வலுவாக்கி அதனை அரசின் ஆவணமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு திருத்தம் செய்வதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் மூலம் சேமிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு, அடுத்தடுத்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சான்றிதழ்களை ஆன்லைனில் உடனடியாக வழங்க முடியும்.
உதாரணத்திற்கு 18 வயதாகும் போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதே நபர் இறந்து விட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தானியங்கி முறையில் எளிதாக நீக்கிவிட முடியும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றாலும் கூட, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் திருமணங்களைப் பதிவு செய்தல் போன்ற அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மேலும் சில விஷயங்களை முன்மொழிவு செய்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வரும் 7-ம் தேதி தொடங்கும் பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த வரைவு மசோதாவை கொண்டு வருவது தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டன. அதன்படி மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு, இச்சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் சேர்த்துள்ளோம்.
இந்த மசோதாவை சட்டமன்றத் துறை ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 17 அமர்வுகள் மட்டுமே இருப்பதால், மசோதா மீதான விவாதங்கள் அடுத்த அமர்வில் விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரல் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் பராமரிக்கப்படுகிறது. அவர்களின் மூலம், மக்கள்தொகைப் பதிவேடு, வாக்காளர் பதிவேடு, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமத் தரவு தளங்களையும் புதுப்பிக்க முடியும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் சிவில் பதிவு மையம் மூலம் பிறப்பு - இறப்பு பதிவுகளை பதிவு செய்கின்றன. குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, கேரளா, கர்நாடகா, கோவா, அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் சொந்தமாக பதிவு ஆவணங்களை பராமரிக்கின்றன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ போன்ற சில யூனியன் பிரதேசங்கள் ஒன்றிய அரசின் மூலம் பதிவுகளை செய்கின்றன. டெல்லி, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்கள் தனியாக பதிவு செய்கின்றன. ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தங்கள் மூலம், அனைத்து தரவுத்தளங்களையும் ஒன்றிணைக்க முடியும். பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால், 2010-ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை புதுப்பிக்கவும், 2015-ல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் திருத்தியமைக்கப்பட்ட தரவைப் புதுப்பிக்கவும் முடியும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஏற்கனவே 119 கோடி மக்களின் தரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
அகத்திக்கீரை சாம்பார்![]() 2 days 6 hours ago |
ராகி அடை![]() 6 days 4 hours ago |
முருங்கைக்கீரை பொங்கல்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 27-01-2023.
27 Jan 2023 -
ஆஸி., ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று: சானியா - போபண்ணா ஜோடி நாளை பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது
26 Jan 2023மெல்போர்ன்: சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது. இறுதிச்சுற்றில் பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது.
-
ஒருநாள் தொடரை போல நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா..? முதல் டி-20 போட்டியில் இன்று மோதல்
26 Jan 2023ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.
-
மகளிர் அண்டர்-19 டி-20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் இன்று இந்திய-நியூசிலாந்து மோதல்
26 Jan 2023வெல்லிங்டன்: மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
-
மகளிர் ஐ.பி.எல்.: அணியின் பெயரை அறிவித்தது அதானி நிறுவனம்
26 Jan 2023பிசிசிஐ சார்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது.
-
3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்
27 Jan 2023வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜப்பானின் ஐ.ஜி.எஸ். 7 உளவு செயற்கைக்கோள்
27 Jan 2023டோக்கியோ : ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி உள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி
27 Jan 2023கீவ் : உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி
27 Jan 2023சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
இந்திய குடியரசு நாளை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Jan 2023இந்திய குடியரசு நாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. இந்தியா கேட், டெல்லி ஆளுநர் மாளிகை உள்ளிட்டவை இடம்பெற்றன.
-
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்
27 Jan 2023ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
-
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை
27 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
-
ஸ்பெயின் பிரதமருடன் ஈரான் செஸ் வீராங்கனை சந்திப்பு
27 Jan 2023மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் பங்கேற்பு..!
26 Jan 2023இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
பட்டியலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நித
-
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்
27 Jan 2023திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
27 Jan 2023திருவாரூர் : புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ்.பேச்சு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ப
-
மார்ச் 3, 4-ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா: இலங்கை அரசு அறிவிப்பு
27 Jan 2023கொழும்பு : மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்
27 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவி
-
பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை
27 Jan 2023சென்னை : குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. தயாரித்துள்ள ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
-
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வலைதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க .ஸ்டாலின் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டம
-
பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
27 Jan 2023சென்னை : பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கொடநாடு வழக்கு விசாரணை பிப். 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
27 Jan 2023ஊட்டி : கொடநாடு கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி.