முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட் அமர்வு உத்தரவு

புதன்கிழமை, 4 ஜனவரி 2023      இந்தியா      அரசியல்
Supreme-Court 2021 07 19

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு இன்று ஒத்திவைத்துள்ளது. மேலும் இந்த வழக்கை இந்த வாரத்தில் முடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது எனவும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.

பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில்., கட்சிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்று இ.பி.எஸ். தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் ஜூலை 11 அன்று பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து இதுவரை பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும் இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என்று ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் செய்யப்பட்டது.  கழகம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகளுக்கு, கழகம் என்றால் கட்சி என்று பொருள் என்று மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் விளக்கம் அளித்தார். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு அடுத்த விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து