முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் இசையமைப்பாளருக்கு 3-வது முறையாக கிராமி விருது : இந்தியாவிற்கு அர்பணிப்பதாக பெருமிதம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      உலகம்
Ricky-Cage 2023 02 06

Source: provided

வாஷிங்டன் : பெங்களூரு இசையமைப்பாளர் ரிக்கி கெஜ்-க்கு மூன்றாவது முறையாக கிராமி இசை விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 65-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த பாப்-ராக் பாரம்பரிய இசை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் நேற்று முன்தினம் தொடங்கிய விருது வழங்கும் விழாவில் பெங்களூருவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ரிக்கி கெஜ்-க்கு மூன்றவது முறையாக கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவர் வெளியிட்ட டிவைன் டைட்ஸ் என்ற பாடல் தொகுப்புக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே ஆல்பத்திற்காக சிறந்த புதிய ஆல்பம் பிரிவில் விருதை வென்றிருந்தார். நடப்பாண்டு சிறந்து ஆழ்ந்து ஒலிக்கும் ஆடியோ ஆல்பம் என்ற பிரிவில் ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இளம் வயதில் கிராமி விருது பெற்ற 4-வது இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள அவர் விருதை இந்தியாவிற்கு அர்பணித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து