எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.43,600 -க்கு விற்பனையானது கடந்த 8 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,360 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. முந்தைய வாரங்களில் இறங்குமுகமாக இருந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் சவரனுக்கு ரூ.360 அதிகரித்திருந்தது.
இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,450-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600 -க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,496 க்கு விற்பனையானது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.73,100-ஆக இருந்தது. தங்கத்தின் விலை படிபடிப்யாக உயர்ந்து கடந்த 8 நாட்களில் மட்டும் 2,360 ரூபாய் அதிகரித்துள்ளது நகை பிரியர்கள் மற்றும் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


