முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Geetha Jeevan 2023 03 20

Source: provided

சென்னை : உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சத்திற்கும்  அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 

தமிழக சட்டசபையில் நேற்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது செப்டம்பர் 15-ல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். மேலும் நாட்டிலேயே நேரடி மானியமாக அதிக நிதி வழங்கும் திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.    

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பலன் அடைய வாய்ப்பு உள்ளது அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். 

ரூ. 1,000 உரிமைத் தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் பலன்பெற முடியாது. இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிமைத் தொகை ரூ. 1,000 மகளிரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். உரிமைத்தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். 

செப்டம்பர் முதல் மார்ச் வரை ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு பொருளாதார சுதந்திரத்தை இத்திட்டங்கள் ஏற்படுத்தித் தரும். இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து