எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Periyasamy 2023 03 30](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2023/03/30/Periyasamy_2023_03_30.jpg?itok=gcnP_PnB)
66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபைில் தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்ப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 30) ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் விவரம் வருமாறு., விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.30 கோடி மதிப்பீட்டில் மலைப் பகுதிகளில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 69 கோடியில் ஊராட்சிகளுக்கான கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண் வசதிகள் அருகிலுள்ள நகர்ப்புறங்களுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தப்படும். ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் ரூ.154 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். உள்ளூர் மயமாக்கல் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கினை எய்திட ரூ.20 கோடியில் பயிற்சி அளிக்கப்படும். ரூ. 20.50 கோடியில் 224 புதிய வாகனங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு வழங்கப்படும். ரூ.1000 கோடியில் தனி நபர் மற்றும் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூ.275 கோடி மதிப்பீட்டில் நடப்படும். ரூ.137 கோடியில் 10,50,000 சுய உதவிக் குழுக்களுக்கு 21 இலட்சம் முருங்கைக் கன்றுகள், ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்படும். 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன.
கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.1000 கோடியில் தனிநபர் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும். விளிம்புநிலை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.500 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 2 days 12 hours ago |
கடாய் பன்னீர்![]() 6 days 15 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 1 week 2 days ago |
-
குற்றவியல் துறை இயக்குநர் நியமனம்: எடப்பாடி கண்டனம்
26 Jul 2024சென்னை : தமிழக குற்றவியல் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விஷ சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
26 Jul 2024சென்னை : விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை அரசு வழங்கக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளத
-
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
26 Jul 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கார்கில் வெற்றி தினம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்
26 Jul 2024சென்னை : கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்: ஒபாமா
26 Jul 2024நியூயார்க் : கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
26 Jul 2024சென்னை : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ரூ. 257 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினிகாந்த் : இணையத்தில் புகைப்படங்கள் வைரல்
26 Jul 2024சென்னை : பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நடிரக் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
26 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களை கேட்க மறுப்பதாக கூறி நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு: விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு
26 Jul 2024சென்னை : யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ்.
-
இலங்கை அதிபர் தேர்தல் செப். 21- ல் நடைபெறும் : ஆக. 15 முதல் மனு தாக்கல்: ஆணையம் அறிவிப்பு
26 Jul 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ல் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அற
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 628 புலிகள் உயிரிழப்பு: அரசு தகவல்
26 Jul 2024புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்
-
இன்று ஆடிக்கிருத்திகை: திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு
26 Jul 2024சென்னை : இன்று ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.
-
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
26 Jul 2024சென்னை : காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் இன்று காங்கிரசார் போராட்டம்: செல்வப்பெருந்தகை
26 Jul 2024சென்னை : மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த
-
ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் மத்திய பா.ஜ.க. அரசு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
26 Jul 2024சென்னை : ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பா.ஜ.க. அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
காசா விவகாரத்தில் அமைதியாக நான் இருக்கப்போவதில்லை : கமலா ஹாரிஸ் எச்சரிக்கை
26 Jul 2024வாஷிங்டன் : காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப்
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
பொருநை அருங்காட்சியக பணி விரைவில் முடிந்து திறக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு
26 Jul 2024சென்னை : கீழடி மற்றும் ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை போல், நெல்லையில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-07-2024.
26 Jul 2024 -
அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது: ஐகோர்ட்
26 Jul 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி பெயர் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
-
பிலிப்பைன்சில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி
26 Jul 2024மணிலா : பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.