முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் ராகுல் 12-ம் தேதி ஆஜராக பாட்னா கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஏப்ரல் 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று பாட்னா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீது இதே போன்று அவதூறு வழக்கை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில் மோடி பாட்னா கோர்ட்டில் தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்தி ஏப்ரல் 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று பாட்னா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சுஷில்மோடி தரப்பு வக்கீல் சஞ்சய் கூறும்போது, 'இந்த அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பில் இருந்து அனைத்து சாட்சிகளின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டு அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன. தற்போது ராகுல் காந்தியின் வாக்குமூலத்துக்காக வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யும் நாளாக ஏப்ரல் 12-ந்தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கில் ராகுல்காந்தி ஆஜராக மாட்டார் என்றும், வேறொரு தேதியை அவரது வக்கீல் கேட்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து