முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் ராகுல் 12-ம் தேதி ஆஜராக பாட்னா கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      இந்தியா
Rahul-Gandhi-1 2023 03 30

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஏப்ரல் 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று பாட்னா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி மீது இதே போன்று அவதூறு வழக்கை பீகார் மாநில பா.ஜனதா தலைவர் சுஷில் மோடி பாட்னா கோர்ட்டில் தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்தி ஏப்ரல் 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று பாட்னா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சுஷில்மோடி தரப்பு வக்கீல் சஞ்சய் கூறும்போது, 'இந்த அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பில் இருந்து அனைத்து சாட்சிகளின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டு அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன. தற்போது ராகுல் காந்தியின் வாக்குமூலத்துக்காக வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யும் நாளாக ஏப்ரல் 12-ந்தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கில் ராகுல்காந்தி ஆஜராக மாட்டார் என்றும், வேறொரு தேதியை அவரது வக்கீல் கேட்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து