எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர் - மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்த உத்தேசித்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தொழில் முதலீட்டாளர்களை அழைப்பதற்காகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வெற்றிகரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களை, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களைச் சந்தித்தேன்.
தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன.
ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டாண்மைத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரங்களில், மூன்று தமிழ்நாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், கடந்த இருபதாண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில், ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்கிறது.
அதோடு, ஜப்பானில் கணிசமான புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி தொடர்பான துறைகளில் அவர்கள் வல்லுநர்களாக உள்ளனர். இதன் விளைவாக, தமிழகத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதுடன், சுற்றுலா வடிவிலும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் வளர்ந்து வருகிறது.
தற்போது சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. 2019-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளது. மேலும் சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.
2024, ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு நடத்தவுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்த்திட ஏதுவாக, நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
அதேபோல், சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளை கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர்.
சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே விமானச் சேவை உள்ளது.
சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை சிங்கப்பூர் அரசின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தன்னைச் சந்தித்தபோது எழுப்பினார். இதே போன்ற கோரிக்கையை சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் பலரும் முன்வைத்தனர். ஆகவே சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையில் அதிக விமானங்களை இயக்கிட அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும் டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சிங்கப்பூர் - மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும், இவற்றை முன்னுரிமை அடிப்படையில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா பரிசீலித்திட வேண்டுமென்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சென்னை அணியில் இணையும் லிவிங்ஸ்டன் - தேஷ்பாண்டே..!
14 Nov 2025சென்னை: ஆர்.சி.பி.-ல் இருந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து துஷார் தேஷ்பாண்டேவும் சி.எஸ்.கே.
-
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
14 Nov 2025திண்டுக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
14 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
கொல்கத்தா முதல் டெஸ்ட்: பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா அணி
14 Nov 2025கொல்கத்தா: கொல்கத்தா முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது.
-
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி: காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி: எடப்பாடி பழனிசாமி
14 Nov 2025சென்னை : காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்
14 Nov 2025செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
குழந்தைகள் தினம்: இ.பி.எஸ். வாழ்த்து
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட துருக்கி நபர்
14 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது துருக்கியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
-
மியான்மர் கலவரப்படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு
14 Nov 2025சென்னை: மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 4 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
14 Nov 2025மதுரை : நித்தியானந்தா சீடர்கள் ஆசிரிமத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் ராஜபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
14 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை போலீசார் நா
-
ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
14 Nov 2025டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
-
பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்
14 Nov 2025டெல்லி: பீகார் மாநிலம் சந்தேஷ் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
14 Nov 2025சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!
14 Nov 2025டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியு
-
பயிற்சியாளராக சவுதி நியமனம்
14 Nov 202519-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
மஹுவா சட்டசபை தொகுதியில் லல்லுவின் மூத்த மகன் தோல்வி
14 Nov 2025டெல்லி: மஹுவா தொகுதியில் தொகுதியில் லல்லு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் தோல்வியடைந்துள்ளார்.
-
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதிப்பு
14 Nov 2025வாஷிங்டன்: இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.
-
ஐ.பி.எல். லக்னோ அணியில் ஷமி..?
14 Nov 2025லக்னோ: இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜம்மு-காஷ்மீர் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சி தோல்வி
14 Nov 2025டெல்லி : ஜம்மு - காஷ்மீர் இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமர் நபயின் வீடு தகர்ப்பு
14 Nov 2025காஷ்மீர் : டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உமரின் வீடு தகர்க்கப்பட்டது.
-
பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்
14 Nov 2025டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.
-
புராதன சின்னங்கள் ஆணையம்: தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு
14 Nov 2025திருவண்ணாமலை : புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
14 Nov 2025சியோல்: தென்கொரிய முன்னாள் பிரதமரை போலீசார் கைது செய்தனர்.
-
நீங்கள் விழாமல் தாங்கிப்பிடித்து கொள்வேன்: குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


