எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவண்ணாமலை : புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளும், கோவிலுக்கு வெளியேயும் முறையாக அனுமதி பெறாமல் அறநிலையத்துறை கட்டிடம் கட்டி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதித்தும், புராதன கோவில்கள், கட்டிடங்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட புராதன சின்னங்கள் ஆணையத்தை 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்றும் கடந்த அக்டோபர் 9-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆணையத்தை அமைக்க 3 மாதங்கள் அவகாசம் வேண்டும். டிசம்பர் 3-ந்தேதி கார்த்திகை தீப பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதனால், பக்தர்களை கண்காணிக்க கோவில் வளாகத்தில் உள்ள அறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ''திருவண்ணாமலை கோவில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள் பணிகளை மேற்கொள்ள புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பது அவசியமாகும். எனவே, அந்த ஆணையம் அமைக்கும் வரை, திருண்ணாமலை கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. கட்டுமான பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கிறோம். புராதன சின்னங்கள் ஆணையத்தை அமைக்க 3 மாதம் கால அவகாசம் வழங்க முடியாது. இந்த ஆணையம் அமைக்க ஒரு மாதம் அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் ஆணையத்தை அமைக்கவேண்டும். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தற்காலிக மாற்று ஏற்பாடுகளை அறநிலையத்துறை மேற்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.
அதேபோல, சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்சினைக்கு தீட்சிதர்கள் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


