எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புவனேஷ்வர் : சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதே போல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்தது எப்படி?
இந்நிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. அதே போல், கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்தது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தவறுதலாக சென்றதாக கூறப்படுகிறது.
காரக்பூர் ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த பெறப்பட்ட முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் பஜாரை கடந்த பின்னர் ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தவறுதலாக மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேற்று முன்தினம் மாலை 6.55 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது, சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது.
இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.
இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணமாக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து மாறி சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று தண்டவாளத்தில் தவறுதலாக சென்று சரக்கு ரயில் மீது மோதியிருக்கலாம். இதன் காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் தடம்புரண்டிருக்கலாம்.
அப்போது அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹவுரா எஸ்பிரஸ் ரயில் கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை நிறைவடையும் போது தான் 3 ரயில்கள் விபத்துக்கான முழுமையான காரணம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 day 21 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 5 days 23 hours ago |
சில்லி சப்பாத்தி![]() 1 week 1 day ago |
-
வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு
21 Sep 2023லாகூர், வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2023.
21 Sep 2023 -
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முகமது சிராஜ் முதலிடம்
20 Sep 2023புதுடில்லி : ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டிகளுக்குப் பிறகு முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளராக ஆனார்.
-
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய ஆடவர் அணியின் புதிய 'ஜெர்சி' வெளியீடு
20 Sep 2023புதுடெல்லி : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
10 அணிகள் ...
-
உலகக்கோப்பை: பாடல் வெளியீடு
20 Sep 202350 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது.
-
சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9,000 கோடி ரூபாய்
21 Sep 2023சென்னை, தனது வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாயை கண்டு சென்னையில் கார் ஓட்டுனர் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
-
ஐ.நா. வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு
21 Sep 2023நியூயார்க், இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா.
-
ஆந்திர சட்டசபையில் பரபரப்பு: தொடையை தட்டி சவால் விட்ட நடிகர் பாலகிருஷ்ணா
21 Sep 2023திருப்பதி, ஆந்திர சட்டசபை நேற்று கூடிய போது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் பாலகிருஷ்ணா தொடையை தட்டி சவால் விட்ட சம்பவம் பெரும்
-
விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு ஜெயில் ஈரான் அரசு அதிரடி உத்தரவு
21 Sep 2023டெக்ரான், விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மசோதா ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
-
பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை
21 Sep 2023நியூயார்க், பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேசினார்.
-
2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு
21 Sep 2023புது டெல்லி, 2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆதி சங்கராச்சாரியாருக்கு ம.பி.யில் 108 அடி உயர சிலை: முதல்வர் சவுகன் திறந்து வைத்தார்
21 Sep 2023போபால், இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஆதி சங்கராச்சாரியார் ஒருவர்.
-
விஜயவாடா - சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் வரும் 24-ம் தேதி முதல் இயக்கம்
21 Sep 2023திருப்பதி, ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
-
நிபா வைரஸ்: ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி: கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
21 Sep 2023திருவனந்தபுரம், நிபா வைரஸ் பாதிப்பை கண்டறிய ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்
-
திருப்பதியில் இன்று கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
21 Sep 2023திருப்பதி, பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று கல்ப விருட்ச வாகன சேவை நடந்த நிலையில் இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா உடை அணிய தடை
21 Sep 2023சூரிச், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.&n
-
நிலவில் இன்று துவங்கும் பகல் பொழுது: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விழித்தெழுமா? இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு
21 Sep 2023சென்னை, நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாராளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம்: மகளிர் மசோதா குறித்து பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2023புது டெல்லி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, பாராளுமன்ற வரலாற்றில் இது
-
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா: சோனியா, மம்தாவுக்கு கனிமொழி அழைப்பு
21 Sep 2023சென்னை, சென்னை நந்தனத்தில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா
-
கனடா நாட்டுடனான உறவில் விரிசல்: விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா நடவடிக்கை
21 Sep 2023புது டெல்லி, கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
டெல்லி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக ராகுல்: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
21 Sep 2023புது டெல்லி, டெல்லி ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார்.
-
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்: கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
21 Sep 2023புது டெல்லி, காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
-
முதல்வர் சித்தராமையா தலைமையில் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த கர்நாடக அமைச்சர்கள் குழு
21 Sep 2023புது டெல்லி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சி எம
-
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
21 Sep 2023வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நாளை 23-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
-
மக்களவையில் நிறைவேறிய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் எதிர்க்கட்சிகள் காரசார விவாதம்
21 Sep 2023புது டெல்லி:பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.