முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் டிராக்டர் விபத்தில் 6 பேர் பலி

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      இந்தியா
Andhra 2023-06-05

Source: provided

ஐதராபாத் : ஆந்திராவில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டிராக்டரில் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நேற்று டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பத்திபாடு மண்டலத்தில் இருந்து பொன்னூர் மண்டலத்திற்கு டிராக்டரில் பயணம் மேற்கொண்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து