முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      ஆன்மிகம்
Nellaiyapur 2023 06 09

Source: provided

நெல்லை : நெல்லையப்பர் கோவில் தேருக்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆணி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான விநாயகர் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்காக, தேரை சுத்தப்படுத்தும் பணி மற்றும் பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் காணும் வகையில், தேரை மூடியிருந்த தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், மாநகராட்சி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து