எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை நேற்று ஐசிசி வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த பாடல் தற்போது வெளியானது. இந்த பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
______________
நியூசி. வீரர் டிம் செளதி விலகல்?
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பிசிசிஐ இணைந்து 50 ஓவா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் வரும் அக். 5 முதல் நவ. 19-ஆம் தேதி வரை நடத்துகின்றன. அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதுகின்றன.இந்த தொடருக்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 போ் கொண்ட நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியும் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய நியூசிலாந்தின் டிம் செளதிக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, டிம் செளதியின் வலது கட்டை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் உலகக் கோப்பை அணியில் டிம் செளதி இடம்பெறுவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
______________
ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்த ரஜினி
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், ஜெய்ஷாவிற்கு நன்றி தெரிவித்து ரஜினி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ-யிடம் இருந்து பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஜெய்ஷா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
______________
அணியில் அஸ்வின் ? அகர்க்கர் பதில்
எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மாற்றாக அஸ்வின் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்க்கர் பதில் அளித்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் காயமடைந்தார். இறுதிப் போட்டியில் அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவரும் உள்ளனர்.
“அக்சர் படேலுக்கு ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து அவர் விரைந்து குணம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரை ஆஸ்திரேலிய தொடருக்காக தேர்வு செய்துள்ளோம். இந்த தொடரில் அவர்களின் செயல்பாட்டை கருத்தில் கொள்வோம். இறுதி முடிவு அக்சரின் காயத்தை பொறுத்து சரியான நேரத்தில் எடுக்கப்படும். அவர் ஃபிட்டாக இருப்பார் என நம்புகிறோம். அப்படி இல்லாமல் மாற்று தேவை இருந்தால் அந்த வழியை பின்பற்றுவோம்” என அகர்க்கர் தெரிவித்துள்ளார்.______________
சாஹல் மனைவி குறித்து நெகிழ்ச்சி
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹலை எடுக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சாஹல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் ஆட தெரிந்த சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதால் சாஹல் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் உலகக்கோப்பையில் கலந்து கொள்ள சாஹலுக்கு கிடைக்காத வாய்ப்பு அவரது மனைவி தனஸ்ரீ வர்மாக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை ஐசிசி வெளியிடவுள்ளது. இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சிறந்த நடனக்கலைஞரான தனஸ்ரீ வர்மா உலகக்கோப்பை தொடருக்காக ஐசிசி வெளியிடும் பாடலில் ரன்வீர் சிங்குடன் நடனம் ஆடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனஸ்ரீ வர்மா பிரபல யூடியூபர் ஆவார். சிறந்த நடன கலைஞரான அவர் நடனம் கற்றுக் கொடுத்தும் வருகிறார். தனது யூடியூப் சேனலில் நடனம் ஆடி அதை வீடியோவாக பகிர்ந்து வருகிறார். சாஹலை திருமணம் செய்யும் முன்பு இருந்தே அவர் வட இந்திய அளவில் யூடியூபில் பிரபலமானவராக இருந்தார். சுமார் 55 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 12 hours 3 min ago |
தக்காளி சாஸ்![]() 3 days 15 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 12 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2023.
09 Dec 2023 -
அம்மா பேரவை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்
09 Dec 2023மதுரை : மாநில அம்மா பேரவை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.
-
ரேஷன் அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண நிதி உண்டு : தமிழ்நாடு அரசு தகவல்
09 Dec 2023சென்னை : குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண தொகை உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் காலமானார்
09 Dec 2023சென்னை : முண்டாசுபட்டி பட புகழ் நடிகர் மதுரை மோகன் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
-
4 மாவட்டங்களில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு வி
-
ஈராக்கில் பல்கலைக்கழக விடுதியில் திடீர் தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு
09 Dec 2023டெக்ரான் : ஈராக்கில் பல்கலைக் கழக விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விப்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது
09 Dec 2023காசா : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
-
சபரிமலையில் மண்டல பூஜை: ஐயப்பனுக்கு 26-ம் தேதி தங்க அங்கி அணிவிப்பு
09 Dec 2023சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 27-ம் தேதி நடக்கிறது.
-
நியாய விலைக்கடைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதமா? - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
09 Dec 2023சென்னை : நியாய விலைக்கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
09 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்
09 Dec 2023அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது., நான் எனது கண்ணில் அடிபட்ட விஷயத்தை சாதரண
-
பெண்கள் பிரிமீயர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீராங்கனை அனபெல்
09 Dec 2023மும்பை : பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல்லை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.
-
தூத்துக்குடியில் தரைதட்டி நின்ற சரக்கு கப்பலை மீட்கும் பணி தீவிரம் : உரம் இறக்குமதி பாதிப்பு
09 Dec 2023தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பலை இழுவை கப்பல் மூலம் மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
-
சோனியா பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Dec 2023புதுடெல்லி : சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.
-
ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கொட்டப்பட்டதா?- ஆவின் நிர்வாகம் விளக்கம்
09 Dec 2023சென்னை : ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீ
-
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகில் பிரிவினைவாதம் அதிகரிப்பு : தலைமை நீதிபதி சந்திரசூட் குற்றச்சாட்டு
09 Dec 2023மும்பை : ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் இந்தியா மேன்மையுடன் செயல்படுகிறது என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், உலகம் முழுவதும் பிரிவினைவாதம் அதிகரிக்க
-
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
09 Dec 2023சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
-
தமிழகத்தில் 15-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
09 Dec 2023சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காசாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம் : நிராகரித்தது அமெரிக்கா
09 Dec 2023நியூயார்க் : காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா.
-
நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற உழைத்திடுவோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
09 Dec 2023சென்னை : நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதன் மூலம் நம் மாணவர்களின் மருத்த
-
தமிழகத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு அளித்த நிதி எங்கே போனது? - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி
09 Dec 2023சென்னை : மத்திய அரசு ஏற்கனவே தமிழகத்திற்கு கொடுத்த நிதி எங்கே போனது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
-
உலகக்கோப்பை போட்டி நடந்த பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மதிப்பீடு
09 Dec 2023லண்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - த
-
கவர்னர் மாளிகை அருகே என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு
09 Dec 2023சென்னை : கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
-
என்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் 15 பேர் கைது
09 Dec 2023மும்பை : மகாராஷ்டிரா, கர்நாடகாவில் என்.ஐ.ஏ. நடத்திய திடீர் சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர.
-
ராகுலின் வெளிநாட்டு பயணம் திடீர் ரத்து
09 Dec 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.