முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுராஷ்டிரா 183 ரன்களில் அவுட்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      விளையாட்டு
Rishap-pant

Source: provided

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் 3வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெவின் ஜிவ்ரஜனி மற்றும் ஹர்விக் தேசாய் ஆகியோர் களம் இறங்கினர். இதில் தேசாய் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. 

இதில் கெவின் ஜிவ்ரஜனி 0 ரன், அடுத்து களம் இறங்கிய ஜாக்சன் 22 ரன், புஜாரா 2 ரன், வாசவதா 25 ரன், பிரேரக் மன்கட் 35 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்விக் தேசாய் அரைசதம் அடித்த நிலையில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் வெறும் 77.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சவுராஷ்டிரா அணி தனது முதல் இன்னிங்சில் 183 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

அஸ்வினின் புதிய உலக சாதனை

இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமான அஸ்வின் சமீபத்தில் தனது 97-வது போட்டியில் 500-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டியில் பெயர்ஸ்டோவின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் (23 போட்டிகளில்) அஸ்வின் இரண்டாமிடம் வகிக்கிறார். இதற்கு முன்பாக ஆஸிக்கு எதிராக இயான் போதம் 22 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

அறிமுகப் போட்டியில் அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அசத்தி வருகிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன்பின் இங்கிலாந்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்தப் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது அறிமுகப் போட்டியிலேயே இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்டர்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். முதல் ஸ்பெல்லில் 7 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். இவர் ஐபிஎல்-இல் ஆர்சிபி அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 112/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஆகாஷ் தீப் 3, அஸ்வின் 1, ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் விலகல்

இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது அணியில் இடம்பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இங்கிலாந்து திரும்புவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் அவர் அணியில் இடம்பெற மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக ரிஹான் அகமது உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வரமாட்டார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிஹான் அகமது 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல்.லில் ரிஷப் பந்த் 

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார். கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என ஏற்கனவே ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்து பேட்டிங் செய்கிறார். நன்றாக ஓடுகிறார். விக்கெட் கீப்பிங் செய்யவும் ஆரம்பித்துள்ளார். அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதால் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவார். முதல் 7 ஆட்டங்களில் ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறக்கப்பட உள்ளார். அவர் உடல் நலனைப் பொறுத்து நாங்கள் தேவையான முடிவுகளை எடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து