எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியா முழுவதும் அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 12 மாநிலங்களுக்கு சென்று 29 திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், மொத்தம் 10 நாட்களில் தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதன்படி, இன்று (மார்ச் 4-ம் தேதி) தொடங்கும் அவருடைய பயணத்தின் முதல் பகுதியாக, தெலுங்கானாவின் அடிலாபாத் நகருக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பொது கூட்டமொன்றில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, தமிழகம் வரும் அவர், கல்பாக்கத்தில் உள்ள அணு சக்தி துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் ஒன்றிற்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.
சென்னையில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஐதராபாத்துக்கு செல்கிறார். தெலுங்கானாவின் சங்காரெட்டியில், நாளை (5-ந்தேதி) பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து, சங்காரெட்டியில் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளார். இதன் தொடர்ச்சியாக, தெலுங்கானாவில் இருந்து ஒடிசா செல்லும் பிரதமர் மோடி, ஜஜ்பூர் நகரில், சண்டிகோல் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பொது கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஒடிசாவில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு செல்கிறார்.
அவர் 6-ந்தேதி கொல்கத்தா நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பராசத் நகரில் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்ற இருக்கிறார். இதன்பின்பு, பீகாருக்கு சென்று பெட்டையா நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
வருகிற 7-ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சென்று ஸ்ரீநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்று மாலை புதுடெல்லியில் நடைபெறும் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். டெல்லியில் மார்ச் 8-ந்தேதி தேசிய விருது உருவாக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அசாமுக்கு செல்கிறார்.
இதனை தொடர்ந்து, 9-ந்தேதி அருணாசல பிரதேசம் செல்லும் அவர், மேற்கு காமெங் பகுதியில் சீலா சுரங்க திட்டம் ஒன்றை தொடங்கி வைக்க உள்ளார். இட்டாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். பின்னர் அசாம் செல்லும் பிரதமர் மோடி ஜோர்ஹத் நகரில் லசித் பர்புகான் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டியும், திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் செய்கிறார். மேற்கு வங்காளம் செல்லும் அவர், சிலிகுரி நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். இதன்பின்னர், பொது கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளார்.
உத்தர பிரதேசத்திற்கு வரும் 10-ந்தேதி செல்லும் பிரதமர் மோடி, அசாம்கார் பகுதியில் நகரில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதன்பின்னர், 11-ந்தேதி நமோ டிரோன் தீதி மற்றும் லக்பதி தீதி நிகழச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் அரியானா பிரிவுக்கான துவாரகா விரைவு சாலையை தொடங்கி வைக்கிறார்.
அன்று மாலை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். குஜராத்தின் சபர்மதி நகருக்கு 12-ந்தேதி செல்லும் அவர், பின்னர் ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு, ஜெய்சல்மர் மாவட்டத்தின் பொக்ரான் நகரில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதனை தொடர்ந்து, 13-ந்தேதி குஜராத் மற்றும் அசாமில் 3 அரை மின்கடத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி காட்சி வழியே பங்கேற்க இருக்கிறார். பின்பு, சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
நினைவுகூர்ந்த திலக் வர்மா
24 Oct 2025ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: பாகிஸ்தான் அணி விலகல்
24 Oct 2025லாகூர்: இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்
24 Oct 2025மெல்பார்ன்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல மாற்றங்கள்...
-
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து
25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.


