எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் 5 மத்திய அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளது.
இங்குள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி மட்டுமின்றி, பாஜக ஹிந்துத்துவ அடையாளமாக முன்னிறுத்தப்படும் அயோத்தியும் அடங்கும். இந்த 5-வது கட்ட தேர்தல் பூர்வாஞ்சலின் 27 தொகுதிகளிலும், பந்தேல்கண்டின் நான்கு தொகுதிகளிலும் நடைபெறும் ஆறாவது மற்றும் ஏழாவது கட்ட தேர்தல்களை முடிவுசெய்யும் வகையில் இருக்கிறது. இது பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும்.
2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 14 இடங்களில் 13-ல் வெற்றி பெற்றது. காங்கிரஸின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இரானி தோற்கடித்த நிலையில் காங்கிரஸிடம் இருந்து அமேதியை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், சோனியா காந்தி 2019-ல் ரேபரேலியை மட்டுமே தக்கவைத்துக் கொண்டார். 2019 மற்றும் 2014 ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், கூட்டணி கட்சியான சமாஜ்வாடி மீதமுள்ள 12 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்தாவது கட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ரேபரேலியில் ராகுல் காந்திக்கும், பாஜக எம்எல்சியும், யோகி ஆதித்யநாத்தின் அமைச்சருமான தினேஷ் பிரதாப் சிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தினேஷ் பிரதாப் சிங் 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் பிற பிற்படுத்தப்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், 40 ஆண்டுகளாக காங்கிரஸ் குடும்பத்தின் பிரதிநிதியான உள்ள கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2019 ஆம் ஆண்டு அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி, இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சி நன்ஹே சிங் சௌகானை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ஹிந்துத்துவ பலத்தை சோதிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இருப்பினும், பைசாபாத் பாஜகவின் கோட்டையாக இருந்ததில்லை. 2009-ல் காங்கிரஸும், 2004ல் பகுஜன் சமாஜ் கட்சியும், 1998ல் சமாஜ்வாடியும் வெற்றி பெற்றன. 1991, 1996, 2014 மற்றும் 2019ல் பாஜக வெற்றி பெற்றது. 2019-ல், ஐந்து முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் இருந்த பாஜகவின் லல்லு சிங்,சமாஜ்வாடியின் ஆனந்த் சென்னை தோற்கடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த முறை சமாஜ்வாடி 9 முறை எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் சேனாவையும், பகுஜன் சமாஜ்வாடி சச்சிதானந்த பாண்டேவையும் ஆகியோரை களமிறங்கியுள்ளதால் பலமுனை போட்டிநிலவுகிறது.
1991 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை மக்களவையில் லக்னௌவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் எம்பி ராஜ்நாத் சிங் மூன்றாவது முறையாக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது பாஜகவின் உண்மையான சவாலாக இருக்கிறது. பாஜகவின் கோட்டையான லக்னௌவில் 1991க்கு பின் அக்கட்சி தோற்றதேயில்லை.2014, 2019 தேர்தலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே வெற்றி பெற்றிருந்தார். லக்னௌவை ஒட்டியுள்ள இந்த இரண்டு தனித் தொகுதிகளின் வெற்றிகள் பாசி சமூகத்தினரின் கைகளில் உள்ளன.
பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கௌஷல் கிஷோர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு சவாலாக சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.சௌத்ரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜேஷ் குமாரும் உள்ளனர். க்னௌவை ஒட்டிய இந்த தொகுதி ஒவ்வொரு முறையும் வெற்றியாளர்களை மாற்றியுள்ளது. இருப்பினும், பாஜக 2014 இல் வெற்றி பெற்று 2019-யிலும் தக்கவைத்துக் கொண்டது. தலித்துகள் மத்தியில் பாசி சமூகத்தினரும், ஓபிசிகளில் குர்மி சமூக வாக்காளர்களும் தொகுதியில் முக்கியமானவர்கள். 20% க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.இந்த முறை பாஜக அதன் எம்பி உபேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக ராஜ்ராணி ராவத்தை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவரான பி.எல். புனியாவின் மகன் தனுஜ் புனியாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பாஜக எம்பி கீர்த்தி வர்தன் சிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியஸ்தர் பேணி பிரசாத் வர்மாவின் பேத்தி ஸ்ரேயா வர்மாவும், பகுஜன் சமாஜின் சௌவுரப் மிஸ்ராவும் போட்டியிடுகின்றனர். 2019 இல் சமாஜ்வாடி- பகுஜன் கட்சி கூட்டணி வேட்பாளரான சுக் லால் வர்மாவை தோற்கடித்த சாத்வி நிரஞ்சன் ஜோதியயே பாஜக மீண்டும் நிறுத்தியுள்ளது. குர்மி சமூகத்தினர் அதிகம் வாழும் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி அதன் மாநிலத் தலைவரான நரேஷ் உத்தமை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் சார்பில் மணீஷ் சச்சன் போட்டியிடுகிறார்.
பிரஜ்பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பில் பகத்ரம் மிஸ்ராவையும், பகுஜன் சமாஜ் கட்சி பிராமணரான நரேந்திர பாண்டேவை களமிறக்கி போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது. தனித்தொகுதியான கோசாம்பியில் பாஜக எம்பி வினோத் சோங்கருக்கும், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இந்திரஜித் சரோஜின் மகனும், வயதில் மிகவும் இளையவரான புஷ்பேந்திர சரோஜுக்கும் இடையே சுவாரசியமான போட்டி நிலவுகிறது. இங்கே, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர் மற்றும் பண்டா உள்ளிட்ட நான்கு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.