எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Aarcaud 2024-05-18](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/05/26/Aarcaud_2024-05-18.jpg?itok=qTdp2ROt)
Source: provided
சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். ஆனால் மலர்க்கண்காட்சி மட்டும் வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மலைகளின் அரசன் என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா மலர்கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. கோடை விழாவை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்காட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
குறிப்பாக, அண்ணாபூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் அங்கு 5.5 லட்சம் மலர்களை கொண்டு, காற்றாலை, நண்டு, சிற்பி, ஆட்டோபஸ், கடல் குதிரை, நட்சத்திர மீன் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்டு டக், மிக்கி மௌஸ், டாம் அன்ட் ஜெரி மற்றும் அலங்கார மலர் வளைவுகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
இதனிடையே, 47வது கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. கோடை விழா இறுதிநாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருந்தது.
நேற்று காலை முதலே ஆர்வத்துடன் ஏற்காட்டிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், அண்ணாபூங்காவில் உள்ள மலர்கண்காட்சியை பார்த்து ரசித்தனர். இதேபோல் ஏற்காடு ஏரியில் உள்ள படகு இல்லத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல், ஏரி பூங்கா, மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மீன் காட்சியகம், கரடியூர் காட்சி முனை, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை, பக்கோடா பாயிண்ட் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் இறுதிநாளான நேற்று, குழந்தைகளின் தளிர் நடை போட்டி நடந்தது. இதில், ஒரு வயது முதல் 5 வயது வரையிலான நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளின் நடனம், ஒய்யாரமான நடை, தினசரி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கி, பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி முதல் 5 நாட்களாக நடந்து வந்த ஏற்காடு கோடை விழா நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் ஏற்காடு அண்ணாபூங்காவில் 5.5 லட்சம் மலர்களால் ஆன உருவங்கள் மற்றும் 30 ஆயிரம் பூந்தொட்டிகளுடன் மலர்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ள இந்த மலர்கண்காட்சியை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மலர்கண்காட்சி மட்டும் வரும் 30-ம் தேதி வரை, மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 2 days ago |
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-முதல் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
16 Jun 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
மொட்டை போட்டு, நாக்கில் அலகு குத்தி திருத்தணியில் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை சரண்யா
16 Jun 2024திருத்தணி : தீவிர முருக பக்தரான நடிகை சரண்யா, வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி, அலகு குத்தி உள்ளார்.
-
அ.தி.மு.க.வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்த தே.மு.தி.க. : ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாக விளக்கம்
16 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jun 2024மதுரை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2024சென்னை : சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது : எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பதில்
16 Jun 2024புதுடெல்லி : இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில
-
டீப் பேக் வீடியோ விவகாரம்: பார்லி. கூட்டத் தொடரில் டிஜிட்டல் இந்தியா மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டம்
16 Jun 2024புதுடெல்லி : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக டீப் பேக் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை தடுத்திட டிஜிட்டல் இந்தியா மசோதா கொண்டு வர மத்
-
காஷ்மீரில் தொடர் தீவிரவாத தாக்குதல்: மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட குழுவுடன் மீண்டும் ஆலோசனை
16 Jun 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
ஆகஸ்ட்டில் வெளியாகிறது டபுள் ஐஸ்மார்ட்
17 Jun 2024உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றி படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மா
-
‘லாந்தர்’ இசை வெளியீடு
17 Jun 2024எம் சினிமா புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லாந்தர்’.
-
பிரம்மிக்கவைக்க வரும் பயமறியா பிரம்மை
17 Jun 202469 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக்