முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்: மத்திய ரயில்வே அமைச்சர் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 10 ஜூலை 2024      இந்தியா
Ashwini-Vaishnav 1

 புது டெல்லி, லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். 

இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

லோகோ பைலட்டுகளுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் 34 ஆயிரம் பேர் ரயில்வேயில் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது 18 ஆயிரம் ஊழியர்களுக்கான ஆட் சேர்ப்பு பணிகள் நடைபெறுகிறது.

லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. அவசர காலங்களில் மட்டுமே லோகோ பைலட்டுகளின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும். அவர்களின் பணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.

லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு ரயில்களில் ரயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து