எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தருமபுரி : கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து நேற்று முன்தினம் மொத்தம் 75 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து கடந்த 17-ம் தேதி வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலை நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கும் மேல் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று முன்தினம் மாலை 75 ஆயிரம் கனஅடி அளவுக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகள் மூழ்கும் நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், காவிரி ஆற்றங்கரையின் இருபுறமும் தொட்டப்படி தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது.
மேலும், மெயின் அருவிக்கு செல்லும் வழியாக நடைபாதைக்கு மேலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 15-ம் தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும், அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே செல்லாமல் நடைபாதைக்கு செல்லும் வழியில், பூட்டி சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடி அளவு வரை வரக்கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 days ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2025சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா
-
இந்தியா 'ஏ' - இங்கி., லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம்
31 May 2025கேன்டர்பரி : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார்.
-
தி.மு.க., பொதுக்குழு கூட்டம்; மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு
31 May 2025மதுரை : 2 நாட்கள் பயணமாக மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி : அதிபர் ட்ரம்ப் புதிய அறிவிப்பு
31 May 2025நியூயார்க் : அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
31 May 2025போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் மாறிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் இன்று தி.மு.க. பொதுக்குழு: பங்கேற்பவர்களுக்கு தடபுடல் விருந்து
31 May 2025மதுரை, மதுரையில் நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வழங்கப்படவுள்ள மதிய விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது.
-
இதுவரை 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
31 May 2025சென்னை, “தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
31 May 2025மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தந்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
பாகிஸ்தான் விரோதத்தை மட்டுமே கொடுக்கிறது: தலைமை தளபதி
31 May 2025புதுடெல்லி, “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகா
-
வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாமில் நிலச்சரிவுக்கு 5 பேர் பலி
31 May 2025இட்டாநகர், அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம்: நோபல் பரிசை வாங்கவே டிரம்ப் தம்பட்டம் அடிப்பதாக விமர்சனம்
31 May 2025வாஷிங்டன், அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்பதற்காக, இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதாக விமர்சன
-
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்..!
31 May 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மாவோயிஸ்டுகள் 8 பேர் சரண்
31 May 2025ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்தார் அர்ச்சனா
31 May 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
-
தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம்: பா.ம.க. தலைவர் அன்புமணி பேச்சு
31 May 2025சோழிங்கநல்லூர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-05-2025.
31 May 2025 -
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
31 May 2025ஜப்பான் : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
-
இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? - முப்படை தலைமை தளபதி விளக்கம்
31 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மீதான போரில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு முப்படை தலைமை தளபதி விளக்கமளித்துள்ளார்.
-
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 7-வது நாளாக தொடரும் தடை
31 May 2025நெல்லை : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
31 May 2025மதுரை : 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. உத்தங்குடி, கலைஞர் திடலில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
-
ராமதாஸ் - அன்புமணி சந்தித்து கொள்ள முயற்சி எடுக்கிறேன்: பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டி
31 May 2025தைலாபுரம், ராமதாஸ்- அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும், என்று முயற்சி எடுக்கிறேன் என்று பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
-
இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி
31 May 2025பெரூட் : இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்தார்.
-
பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு: செவிலியர் மீது வழக்குப்பதிவு
31 May 2025வேலூர் : வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்
31 May 2025புதுடெல்லி, அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியு
-
வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? பயணிகள் புகார்
31 May 2025சென்னை : வந்தே பாரத் ரயிலில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.