முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலச்சரிவில் காணாமல் போனவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: கேரள அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kerala-Assembly

திருவனந்தபுரம், கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களின் முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளத்தில் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களின் நிலை என்னவென்றே தெரியாமல் தொடர்ந்து  8-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நிலச்சரிவில் காணாமல் போனவர்களின் சரியான பட்டியல் அரசால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மறுவாழ்வு வழங்குவதே அரசின் நோக்கமாகும். 

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா மற்றும் முண்டக்கய் பகுதிகளை வயநாட்டில் மறுவாழ்வு திட்டம் முழு உலகிற்கும் முன்மாதிரியாக இருக்கும்.  மேலும் பேரிடரால் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகள் குறித்து விரைவில் கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து