முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவுக்கான இந்திய துாதரை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      இந்தியா
Central-government 2021 12-

புது டெல்லி, கனடாவில் உள்ள இந்திய தூதரை திரும்பப் பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்

பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்திய துாதரை தொடர்புபடுத்தி அந்நாட்டு அரசு கடிதம் அனுப்பியது. இதற்கு பதிலடி கொடுத்து விரிவான அறிக்கையை மத்திய அரசு  வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான கனடா துாதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவுக்கான இந்திய துாதரை திரும்பப் பெறுவதாக அறிவித்த மத்திய அரசு, நம் நாட்டில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது. 

வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு செப்டம்பரில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு சமீபத்தில் பிரதமர்  மோடி சென்றார்.  அங்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் சந்தித்தார். இருவரும் நலம் விசாரித்ததுடன் சில நிமிடங்கள் பேசினர். 

இது குறித்து கருத்து தெரிவித்த  ட்ரூடோ, கனடா நாட்டவர்களின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் அடிப்படை கடமை. அதில் தான் நானும் கவனம் செலுத்தி வருகிறேன் என, குறிப்பிட்டார்.  

இதைத் தொடர்ந்து, கனடா நாட்டினரின் பாதுகாப்பு குறித்து மோடியிடம் ட்ரூடோ வலியுறுத்தியதாக பரவலாக பேச்சு எழுந்தது. இதை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ அரசின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும், நம் வெளியுறவுத் துறை நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது.  

அதில், இந்தியாவுக்கு எதிரான மனநிலையுடன் ட்ரூடோ செயல்படுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது அடங்குவதற்குள், டெல்லியில் உள்ள கனடா துாதரகத்தின் துணை துாதரக அதிகாரியும், துாதரக பொறுப்பு அதிகாரியுமான ஸ்டீவர்ட் வீலரை, நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு நேற்று முன்தினம்நேரில் அழைத்து, மத்திய அரசு தரப்பில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நம் வெளியுறவுத் துறை கூறியுள்ளதாவது, 

கனடாவில் ஏற்கனவே பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் வன்முறைகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசில், அங்குள்ள நம் துாதரக அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

நம் துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கனடா அரசு கூறியுள்ளது. ஆனால், அங்குள்ள சூழ்நிலை அதை உறுதி செய்வதாக இல்லை. நம் துாதர் மீதே பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நம் துாதரக அதிகாரிகள் அங்கு இருப்பது அவர்களுடைய பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைந்து விடும்.

தற்போதுள்ள ட்ரூடோ அரசின் மீது நமக்கு நம்பிக்கை இல்லை.  அதனால், கனடாவில் உள்ள நம் துாதரை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள துாதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுகின்றனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து