எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனிடையே இந்த போரில் உக்ரைன் எல்லைகளில் போரிடுவதற்கு ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரஷ்ய ராணுவத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் விரைவில் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட கேரளாவை சேர்ந்த நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"இன்றைய நிலவரப்படி, ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. இதில் 96 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இன்னும் 18 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர், அவர்களில் 16 பேர் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


