எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.
இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார். சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலப்பிரச்சனை உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர்களிடம் வலியுறுத்தி கூறப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் யார்-யார்? என்பதை பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று குற்றப் பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழிக்குப்பழி வாங்கும் வகையில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் சட்டம் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உயர் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ரவுடிகள் இடையேயான மோதலில் நடக்கும் கொலை சம்பவங்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தி அதன் முழு பின்னணியையும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன், சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர் முழுமையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைவாகவே நடந்து உள்ளன. 2024-ல் 1,540 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


