எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. முன்னதாக முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 34-வது ஓவரில் பந்தை பாய்ந்து விழுந்து பிடிக்க முயற்சித்த போது காயமடைந்தார். இடது கை ஆள்காட்டி விரலில் காயமடைந்த அவர் வலியால் துடித்தார். தொடர்ந்து கீப்பிங் செய்ய இயலாது என்று கூறியதால் பெவிலியன் திரும்பினார்
அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் பணியாற்றினார். அவரது காயத்திற்கு இந்திய மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. இருப்பினும் பண்ட் 2-வது நாள் ஆட்டத்தில் களத்திற்கு திரும்புவாரா? இல்லையா? என்று கேள்வி நிலவியது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டத்திலும் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், "இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரிஷப் பந்த் குணமடைந்து வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2 ஆம் நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார்" என்று பதிவிட்டுள்ளது.
__________________________________________________________________________________________________
ஜோ ரூட்டின் 37-வது சதம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று முன்தினம் (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 11) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 37-வது சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் (36 சதங்கள்) விளாசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். சதம் விளாசி அசத்திய ஜோ ரூட், சிறிது நேரத்திலேயே பும்ரா பந்துவீச்சில் 104 ரன்களில் போல்டானார்.
__________________________________________________________________________________________________
ஒலிவியா ஸ்மித் சாதனை
கனடாவைச் சேர்ந்த ஒலிவியா ஸ்மித் (20 வயது) லிவர்பூல் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ஆர்செனல் கால்பந்து அணி ஒரு மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.11.60 கோடி மதிப்புக்கு ஆர்செனல் அணி ஒலிவியா ஸ்மித்தை வாங்கியிருக்கிறது. 20 வுமன்ஸ் சூப்பர் லீக் தொடரில் அறிமுகமானபோது ஒலிவியா ஸ்மித் 7 கோல்கள் அடித்தார். 20 வயதான இளம் வீராங்கனை பார்வேடாக லிவர்பூல் அணியில் விளையாடுகிறார். இவர் விங்கராகவும் சென்டர் ஸ்டிரைக்கராகவும் விளையாடக் கூடியவர்.
ஸ்போர்டிங் லிஸ்பென் அணியிலிருந்த ஒலிவியா ஸ்மித் கடந்த ஜூலை 2024-இல் லிவர்பூல் அணியில் சேரும்போதே 2 லட்சம் யூரோ சம்பளத்திற்கு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் அமெரிக்க வீராங்கனை நவோமி கிர்மா 1.1 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.9.45 கோடி) வாங்கியதே மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளமாக இருந்து வந்தது. தற்போது, ஒலிவியா ஸ்மித் இதனை முறியடித்துள்ளார். மகளிர் சாம்பியன்ஸ் லீக்கை வென்ற ஆர்செனல் மேலும் அணியை வலுப்படுத்த இவ்வளவு தொகையைச் செலவிட்டுள்ளது.
__________________________________________________________________________________________________
முல்டரிடம் லாரா வலியுறுத்தல்
டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனாக செயல்பட்ட வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் நினைத்திருந்தால் எளிதாக 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது தொடர்பாக முல்டர் கூறுகையில் "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததைதான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா அவர் தெரிவித்தார்" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் "லாரா தன்னிடம் பேசினார். அப்போது 400-ஐ நோக்கி சென்றிருக்க வேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தால், அவருடைய ஸ்கோரை விட அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் அவர் விரும்புகிறார்" என முல்டர் தெரிவித்துள்ளார்.
__________________________________________________________________________________________________
அயர்லாந்து வீரர் சாதனை
அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது. இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
__________________________________________________________________________________________________
கீப்பர் ஜேமி சுமித் சாதனை
இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. நேற்றைய நாளின் தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், ஜோ ரூட் 104 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனால் தடுமாறிய இங்கிலாந்து அணியை விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (37 ரன்கள்*) மற்றும் பிரைடன் கார்ஸ் (16 ரன்கள்*) கைகோர்த்து காப்பாற்றினர். இதில் ஜேமி சுமித் 10 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்தார். இந்த 1,000 ரன்களை 1,303 பந்துகளில் ஜேமி சுமித் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
__________________________________________________________________________________________________
தந்தைக்காக மகன் செய்த செயல்
லண்டனில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செம் வீர்பெக்- கேடரினா சினியாகோவா ஜோடியும் ஜோ சலிஸ்பெரி- லூயிசா ஸ்டெபானி ஜோடியும் மோதினார்கள். இந்தப் போட்டியில் 2-0 என செம் வீர்பெக்- கேடரினா சினியாகோவா வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்கள். போட்டி முடிந்தபிறகு நெதர்லாந்தைச் சேர்ந்த செம் வீர்பெக் தனது தந்தையின் பிறந்த நாளுக்காக அனைவரையும் பாடல் பாடும்படிக் கூறினார். செம் வீர்பெக் கூறியதாவது: இது நிச்சயமாக எனது தந்தைக்குப் பிடிக்காது. ஆனால், எனக்கு மிகவும் பிடிக்கும்.
இன்று எனது தந்தையின் பிறந்த நாள். அதனால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தக் கோப்பை அவருக்குச் சமர்ப்பணம். இதற்கு முன்பாக நான் இதைச் செய்ய விரும்புகிறேன். அவரது பெயர் பிராங். அவருக்காக நாம் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினால் நன்றாக இருக்கும். தயாரா? மூன்று, இரண்டு, ஒன்று. பிறந்த நாள் வாழ்த்துகள் டியர் பிராங் என்றார். செம் வீர்பெக் உடன் இணைந்து பார்வையாளர்கள் அனைவரும் வாழ்த்துப் பாடலை இசையமைத்துக்கொண்டே பாடினார்கள். அவரது தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த விடியோவை விம்பிள்டன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த விடியோ வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
21 Jul 2025சென்னை, மல்லிகார்ஜுன கார்கே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
தமிழ்நாட்டின் அடுத்த டி.ஜி.பி.யை தேர்வு செய்யும் பணிகள் துவக்கம்
21 Jul 2025சென்னை, தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.