எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் பல்வேறு விவகாரங்களை முன்நிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பாதுகாப்புதுறை மந்திரியை பேச அனுமதிக்கிறார்கள். நான் எதிர்க்கட்சித் தலைவர். அவையில் பேசுவது என்னுடைய உரிமை. ஆனால், என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதித்தால் தானே விவாதம் நடைபெறும்.
மக்களவையில் பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு மட்டும் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஒரு புதிய அணுகுமுறை. அரசு தரப்பில் உள்ளவர்கள் பேச முடிந்தால், எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


