எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு அவை நடவடிக்கைகள் முதல் நாளே முடங்கின.
முதல் நாளில்...
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டி.ஆர் பாலு, அகிலேஷ் யாதவ் என ஏறக்குறைய முழு அவையும் நிரம்பி இருந்தது.
இரங்கல் குறிப்புகள்...
தொடக்க நிகழ்வாக, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். கிஷன் கபூர் (இமாச்சலப் பிரதேசம்), பகத் ராம் (பஞ்சாப்), குமரி அனந்தன் (தமிழ்நாடு), கிரிஜா வியாஸ் (ராஜஸ்தான்), மினாட்டி சென் (மேற்கு வங்கம்), சுக்தேவ் சிங் திண்ட்சா (பஞ்சாப்), சோட்டி சிங் யாதவ் (உத்தரப் பிரதேசம்), ஆனந்த் சிங் (உத்தரப் பிரதேசம்) ஆகிய மறைந்த உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்பு மற்றும் சாதனைகள் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்காக அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த சபாநாயகர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் துளிகூட ஏற்காது என குறிப்பிட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு...
இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அவை ஒத்திவைப்பு...
இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அமளி நீடித்து வந்த நிலையில், சில உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். எனினும், அமளி தொடர்ந்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து, அவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. மீண்டும் அவையில் அமளி ஏற்பட்டதை அடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
18 நோட்டீஸ்கள்...
இதேபோல், மாநிலங்களவை அதன் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் கூடியது. பிரேந்திர பிரசாத் பைஷ்யா, கானாட் புர்கயஸ்தா ஆகியோர் மாநிலங்களவையின் புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர். அவையை தொடங்கிவைத்துப் பேசிய ஜக்தீப் தன்கர், “விதி எண் 267ன் கீழ் விவாதிக்க 18 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், கீழடி அகழாய்வு அறிக்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ள இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அது இந்திய விவசாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன.” என தெரிவித்தார். மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவை பேச அழைத்தார்.
அரசு விளக்கம் அளிக்க....
அவையில் பேசிய கார்கே, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எதிர்க்கட்சிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. அதேநேரத்தில், போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்காவே காரணம் என அதன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். போர் நிறுத்தத்துக்கு முன்வராவிட்டால் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என தான் கூறியதை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். மேலும், 5 ஜெட் விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாகவும் கூறி இருக்கிறார். இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
பிரதமர் விளக்கம் அளிக்க....
இதற்கு பதில் அளித்துப் பேசிய மாநிலங்களவை தலைவர் ஜே.பி. நட்டா, “எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இதை அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், விதி எண் 267ன் கீழ் இதை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருப்பதை ஏற்க முடியாது.” என தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
விவாதிக்க வேண்டும்...
அப்போது பேசிய ஜக்தீப் தன்கர், “இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். ஒருங்கிணைந்த விவாதத்துக்கு அரசு தயாராக உள்ளது. தலைவர்களைச் சந்தித்து விவாதத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எவ்வளவு நேரம் விவாதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம் விவாதிப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்” என தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை 12 மணிக்குக் கூடியதை அடுத்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
21 Jul 2025திருப்பூர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடகள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடு
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கு 200 எம்.பி.க்கள் ஆதரவு
21 Jul 2025புதுடில்லி : பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ், அர்ஷ்தீப் விலகல்
21 Jul 2025மான்செஸ்டர் : காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளனர்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை: பார்லி.யில் அமைச்சர் தகவல்
21 Jul 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன
-
பன் பட்டர் ஜாம் திரை விமர்சனம்
21 Jul 2025கல்லூரி மாணவரான நாயகன் ராஜு, தோழி பவ்யாவை காதலிக்கிறார்.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
அந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன்: ஹர்பஜன்
21 Jul 2025மும்பை : ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.