எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.
’அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி’ என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும், புதிய டைடல் பூங்காக்களை நிறுவ முதல்வர் ஸ்டாலினால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இவற்றின் கட்டுமானப்பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா, முதல்வர் ஸ்டாலினால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் அப்பகுதிகளில் வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியடையவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 5 days ago |
-
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.
-
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
01 Aug 2025பென்னாகரம் : ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2025.
01 Aug 2025 -
வருகிற 11, 12-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
01 Aug 2025சென்னை : கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க.
-
கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ பேட்டி
01 Aug 2025சென்னை, “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என வைகோ தெரிவித்துள்ளார்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா பேரன் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
01 Aug 2025பெங்களூரு, வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரம்: யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
01 Aug 2025புதுடில்லி : டிரம்ப் வரி விதிப்பு விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி போனில் ஆலோசனை நடத்தினார்.
-
3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ஆக. 11-ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார் இ.பி.எஸ்.
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
-
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இல்லாததால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
01 Aug 2025புதுடெல்லி, பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
அரசு நிகழ்வில் பங்கேற்க ஆட்டோவில் சென்ற சந்திரபாபு
01 Aug 2025கடப்பா : ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
-
அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை
01 Aug 2025சென்னை, அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென
-
10 ஆண்டுகளில் இது முதல்முறை: மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் மட்டும் 1.03 கோடி பேர் பயணம்
01 Aug 2025சென்னை : ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
-
தமிழ்நாடு முழுவதும் 1,256 மருத்தவ முகாம்கள்: 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம் : சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
01 Aug 2025சென்னை : 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
-
முதல்வரை சந்திக்க நேரம் கேட்கவில்லை: ராமதாஸ்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் ஆக.7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு சென்னை : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்தது.
01 Aug 2025சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும்? - நாசா விளக்கம்
01 Aug 2025அமெரிக்கா : உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கு நாசா மறுத்துள்ளது.
-
மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்: கோவில்பட்டியில் இ.பி.எஸ். உறுதி
01 Aug 2025கோவில்பட்டி, தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அ.தி.மு.க.
-
பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்
01 Aug 2025சென்னை : கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.
-
5 நாட்களுக்கு பிறகு கவின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
01 Aug 2025திருநெல்வேலி, நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடலை ஐந்து நாட்களுக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
-
கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் : மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு
01 Aug 2025தூத்துக்குடி : கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்திற்கான நிவாரண உதவியை மாநில எஸ்.சி., எஸ்.டி. அணையம் அறிவித்துள்ளது.
-
71-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக 'பார்க்கிங்' தேர்வு
01 Aug 2025புதுடில்லி : இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்: இ.பி.எஸ். மனு தள்ளுபடி
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை மாற்றம்..?
01 Aug 2025லக்னோ : ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூரின் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணி நேரத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
-
திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (ஆக.