Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் நேரடி வரவு வைக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      தமிழகம்
EPS 2020 11-16

நெல்லை, 7வது முறையாக அல்ல, இன்னமும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி தி.மு.க.விற்கு தமிழகத்தில் இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருநெல்வேலியில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாய மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து உரையாடல் நடத்தினார். 

அப்போது அவர் பேசியதாவது; "இயற்கை விவசாயத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசினீர்கள்.  இன்று இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வந்துள்ளது.  அ.தி.மு.க. அரசு அமைந்த பிறகு இயற்கை விவசாயத்துக்கு முடிந்த அளவில் உதவி செய்வோம்.

இன்று பொதுப்பணித்துறையின் கீழ் 14 ஆயிரம் ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 24 ஆயிரம் குளம், குட்டைகள், ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான ஏரிகளை நாங்கள் தூர் வாரினோம். அதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் 1,240 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.  அ.தி.மு.க. ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.  

அ.தி.மு.க. ஆட்சியில் தான் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை 5 ஆண்டுகளில் 2 முறை தள்ளுபடி செய்தோம். விதை மானியம், நடவு மானியம் கொடுத்தோம். பயிர் காப்பீடு திட்டம் மூலம் அதிக எண்ணீக்கையிலான விவசாயிகளுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தது அ.தி.மு.க. அரசு.

விவசாய நிலங்களை காக்கவும், மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் பாதுகாக்கப்பட்ட வேலாண் மண்டலங்களை கொண்டுவந்தோம். மும்முனை விவசாயம் வழங்கினோம்.   அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினோம். 7வது முறையாக அல்ல, இன்னமும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி தி.மு.க.விற்கு தமிழகத்தில் இடமே இல்லை. தமிழக மக்கள் ஏற்றம் பெறும் வரை நான் ஓயப்போவதில்லை." இவ்வாறு அவர் கூறினார்.'

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து