எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை: டி.ஜி.பி. நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக டிஜிபி நியமனம் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வருகிற 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவும், அவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு செய்வது டிஜிபி நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது. தமிழகத்தில் 2026-ல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசு உயர் பதவிகளில் தங்களுக்கு சாதகமானவர்களை வைத்துக்கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. தமிழகத்தில் ஆணவக் கொலை, கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்பட வேண்டியது அவசியம். எனவே தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலை ஓய்வுக்கு பிறகு, பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும், சங்கர் ஜிவாலின் பணிக் காலத்தை நீட்டிப்பு செய்யவும் இடைக்கால தடை விதித்தும், டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு உடனடியாக தயார் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு புதிய டிஜிபி நியமனம் தொடர்பான நடைமுறைகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், டிஜிபி நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2006-ல் பிரகாஷ் சிங் வழக்கில் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை 2019-ல் நீதிபதி தீபக் மிஸ்ரா தெளிவுபடுத்தியுள்ளார். டிஜிபி பதவியை சீனியர்களுக்கு தான் வழங்க வேண்டும் என நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியுள்ளனர். டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
இருப்பினும் இந்த வழிகாட்டுதல்களை தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பின்பற்றுவது இல்லை. எனவே டிஜிபி நியமனத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது ? என்பது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும். இதில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும். மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-08-2025.
04 Aug 2025 -
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் – விமர்சனம்
04 Aug 2025தனது தந்தையில் வாழ்க்கை வரலாற்றை எழுத நினைக்கும் நாயகன் வெற்றிக்கு காவல் அதிகாரி தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
04 Aug 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
அக்யூஸ்ட் திரைவிமர்சனம்
04 Aug 2025நாயகன் உதயா, எம்.எல்.ஏ கொலை வழக்கு விசாரணைக்ககாக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.
-
செயின் பறிப்பு சம்பவம்: அமித்ஷாவுக்கு காங். எம்.பி., சுதா கடிதம்
04 Aug 2025புதுடெல்லி, செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளார்.
-
சரண்டர் திரைவிமர்சனம்
04 Aug 2025காவல் நிலையத்தில் ஒரு துப்பாக்கி மாயமாகிறது.
-
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராகு கேது
04 Aug 2025சமுத்திரக்கனி நடிப்பில் தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ’ராகு கேது’.
-
ராகுல் காந்தி கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
04 Aug 2025டெல்லி, இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உசுரே திரைவிமர்சனம்
04 Aug 2025ஜனனியும் டீஜேவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா எதிர்க்கிறார். மந்த்ராவின் எதிர்ப்பையும் மீறி ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ?
-
வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா? முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்: மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார்
04 Aug 2025சென்னை, வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா ப
-
Mr Zoo Keeper திரைவிமர்சனம்
04 Aug 2025இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் இயக்கத்தில் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் Mr Zoo Keeper (மிஸ்டர் ஜூகீப்பர்).
-
பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி., 11-வது நாளாக முடங்கியது
04 Aug 2025புதுடெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நேற்று (ஆகஸ்ட் 4) நாள் ம
-
நிசார் 100% சிறப்பாக செயல்படுகிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
04 Aug 2025திருவனந்தபுரம், இன்றைய நிலவரப்படி, 100 சதவீதம் நிசார் செயற்கைக்கோள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
-
கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 7-ம் தேதி அமைதிப்பேரணி
04 Aug 2025சென்னை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின்7வது நினைவு தினமான வருகிற 7-ந்தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
சிபு சோரன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Aug 2025சென்னை, சிபு சோரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல்
04 Aug 2025சென்னை, ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தாய், தந்தை, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் துரை வைகோ சந்திப்பு
04 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று சந்தித்து பேசி உள்ளார்.
-
எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்: நயினார் நாகேந்திரன் அழைப்பு
04 Aug 2025விருதுநகர், எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
முதல்வர் பெயருக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
04 Aug 2025புதுடெல்லி, முதல்வரின் பெயரை பயன்படுத்த ஐகோர்ட்டு தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது
-
மீஞ்சூரில் 6-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
04 Aug 2025சென்னை, மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து வருகிற 6-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி
-
இந்தியா-பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்
04 Aug 2025நியூயார்க், ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதி மாற்றம்
04 Aug 2025மதுரை, த.வெ.க. மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஓ.டி.பி. விவகாரம்: தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
04 Aug 2025புதுடெல்லி, ஓ.டி.பி. விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது: அன்புமணியை சாடிய துரைமுருகன்
04 Aug 2025சென்னை, அன்புமணி பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு
04 Aug 2025சென்னை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.