எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் டிராபியில் பாதியிலேயே அஸ்வின் வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.அஸ்வின் (39 வயது) இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கடந்த டிசம்பரில் ஓய்வை அறிவித்தார். பிளேயிங் லெவனின் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றதாக அப்போது தகவல் மூலம் தெரியவந்தது.
சமீபத்தில் ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்த அவர் பிபிஎல் தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் இது குறித்து அஸ்வின் பேசியதாவது: இந்திய அணியில் இடமில்லை என்றோ ஓய்வு பெற்று விடு என்றோ என்னை யாரும் சொல்லவில்லை. உண்மையில் நான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லும்போது 2-3 நபர்கள் ’வேண்டாம்; இன்னும் கூடுதலாக விளையாடு’ என்றே கூறினார்கள். கேப்டன் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீரும் மீண்டும் ஒருமுறை யோசி எனவும் கூறினார்கள். ஆனால், எனது ஓய்வு பற்றி அஜித் அகர்கரிடம் பெரிதாக பேசவில்லை. ஓய்வு பெற்றதில் எனது தனிப்பட்ட முடிவுதான் காரணம். யாரும் வற்புறுத்தவில்லை எனக் கூறினார்.
டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
நவம்பர் மாதத்தில் நடைபெறும் நட்பு ரீதியான போட்டியில் விளையாட ஆர்ஜென்டீன அணி கேரளத்துக்கு வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவிருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த டிக்கெட்டுகளின் விலை தோராயமாக ரூ.3,500 முதல் ரூ.10 லட்சம் வரையிலான வகைமைகளில் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 14ஆம் தேதி கொச்சிக்கு வரும் மெஸ்ஸி, நவ.17ஆம் தேதி நேரு திடலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார். கோழிக்கூட்டில் மெஸ்ஸி சாலை வலம் வருவது, கொச்சியில் ரசிகர்களைச் சந்திப்பது குறித்த நிகழ்வுகள் தற்போது பரிசீலித்து வருவதாகவும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. கொச்சியின் ஜிசிடிஏ 60,000 பார்வையாளர்கள் பங்கேற்கும்படி திடலை தயார்படுத்தி வருகிறது. ஐஎஸ்எல் போட்டிகளுக்கே 35,000- 40,000 பார்வையாளர்கள் மட்டுமே இருக்கும்படி அமைக்கப்படிருந்த இந்தத் திடலில் தற்போது இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் கடைசியாக விளையாடிதால் அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த இன்னிங்ஸ்: ஆஸி. கேப்டன்
ஆஸி. மகளிரணியின் அபாரமான வெற்றிக்கு வித்திட்ட பெத் மூனியின் இன்னிங்ஸ்தான் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் என ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மகளிரணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸி. அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அங்கிருந்து 221 ரன்களாக மாற பெத் மூனி (109) மற்றும் அலானா கிங் (51*) உதவினார்கள்.
இந்தப் போட்டி குறித்து ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி கூறியதாவது: இரண்டு புள்ளிகள் கிடைத்தன. நாங்கள் அடுத்த போட்டிக்குச் சென்றுவிடுவோம். பெத் மூனி விளையாடி, நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்பேன். நான் என் கிரிக்கெட் வாழ்நாளில் பெத் மூனியின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன். இதுவரை நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸை அவர் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் 150-160 ரன்கள் மட்டுமே எடுப்போம் என்றிருந்தது. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். 200 ரன்களைக் கடக்க மூனியும் அலானாவும் உதவினார்கள். சில நேரங்களில் பிட்ச் திடீரென மாறுகிறது. இனிமேல் பிட்ச்களுக்கு ஏற்ப விரைவாகவே நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ரூ.58 கோடியை நிராகரித்த வீரர்கள்
இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.
இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன்: முதல்வர்
09 Oct 2025சென்னை: ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதி வரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் மு.க.
-
முதல்வர் இன்று பெங்களூரு பயணம்
09 Oct 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான முதல் குற்றவாளி நாகேந்திரன் மரணம்
09 Oct 2025சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபள தாதா நாகேந்திரன் உயிரிழந்தார்.
-
இந்தியா - இங்கி., இணைந்து கூட்டறிக்கை: புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர்
09 Oct 2025மும்பை: இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார்.
-
கலப்பட இருமல் விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் கைது
09 Oct 2025சென்னை: தமிழகத்தின் கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆர்.ஜே.டி. தலைவர் தேர்தல் வாக்குறுதி
09 Oct 2025பாட்னா: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஆர்.ஜே.டி.யின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எத்தனை அடிமைகள் வந்தாலும் தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது திருமண விழாவில் துணை முதல்வர் பேச்சு
09 Oct 2025திண்டுக்கல்: பா.ஜ.க. தற்போது புதிய அடிமை கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். புதிய அடிமைகள் கூட கிடைக்கலாம்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
09 Oct 2025சென்னை: ஒரு சவரன் விலை காலையில் ரூ.120 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
-
இருமல் மருந்தால் ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக அதிகரிப்பு
09 Oct 2025சென்னை: இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகளில் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்
09 Oct 2025கான்பெரா: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் முன்னிலையில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்
-
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
09 Oct 2025சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
நவம்பர் 18-ல் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்
09 Oct 2025சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 16 இல் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18 இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-10-2025.
09 Oct 2025 -
இலங்கை கடற்படையால் 30 ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு
09 Oct 2025ராமேசுவரம்: எல்லைதாண்டியதாக நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை தப்பாக்கி முனையில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு
09 Oct 2025டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.
-
த.வெ.க. நிர்வாகி மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
09 Oct 2025கரூர்: த.வெ.க. நிர்வாகி மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் ஒரு திருப்புமுனை பிரதமர் நெதன்யாகு தகவல்
09 Oct 2025இஸ்ரேல்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன்
09 Oct 2025நெல்லை: விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
09 Oct 2025சென்னை: 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு
09 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோவையில் ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்ட அவிநாசி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Oct 2025கோவை: கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ. மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
-
தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம்
09 Oct 2025இமயமலை: இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்தார்.
-
உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் கனவு கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Oct 2025கோவை: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் கனவு என்று கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் தெரிவ