எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ‘டித்வா' புயல், கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து சென்று மழையை கொடுத்து இருக்கிறது. இந்த புயல் உருவாவதற்கு முன்னதாகவே இது காற்று பாதிப்பை ஏற்படுத்தாமல், பரவலாக நல்ல மழையை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இது நல்ல மழையை கொடுத்த புயலாகவே இருந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 29-ந் தேதி தமிழகப் பகுதிகளுக்குள் நுழைந்து மழையை கொடுக்கத் தொடங்கியது. புயலின் மையப் பகுதிகளுக்குள் திடீரென நுழைந்த வறண்ட காற்று ஊடுருவலால், எதிர்பார்த்த மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு மழையை கொடுக்கும் நிகழ்வாக இருந்தது.
ஆனால் வட மாவட்டங்களில் இந்த புயல் பெரிய ஏமாற்றத்தை கடந்த மாதம் 30-ந் தேதி கொடுத்தது. அதிகனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டு, வறண்ட காற்றின் ஊடுருவலால் அன்றைய தினம் மழை பொய்த்து போனது. இதன்படி டித்வா புயல் செயலற்ற நிலையில் சென்னைக்கு அருகே வலுவிழக்க தொடங்கியது. இதனையடுத்து டெல்டா, தென் மாவட்டங்களில் பெய்த மழைகூட வட மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்யவில்லையே என பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில், வலுவிழந்து சென்னை கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தஞ்சம் அடைந்திருந்த டித்வா புயல், மேற்கத்திய தாழ்வுநிலையில் இருந்து அதாவது, இமயமலையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றை ஈர்த்து வலுவான மேகக்கூட்டங்களை உருவாக்கத் தொடங்கியது. கடந்த 3 நாட்களுக்கு முன் காலையில் இருந்து தன்னுடைய மழை ஆட்டத்தை மீண்டும் தொடங்கியது.
சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்திலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்துள்ளது.
இப்படியாக வட மாவட்டங்களிலும் டித்வா புயல் வலுவிழந்த நிலையிலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18 மணி நேரத்துக்கும் மேலாக நிலைகொண்டு, மழையை கொட்டியது. இதனால் சென்னையிலும், புறநகர் பகுதிகளில் சில இடங்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நேற்று முன்தினம் காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழையை கொடுத்தபடியே இருந்தது. பின்னர், சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வுப் பகுதியாகவும் வலுகுறைந்து போனது.
‘டித்வா' புயல் வலுவிழந்து போன நிலையில், அடுத்துவரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தரிடம் தெரிவிக்கையில், “புயல் கரையை கடந்த நிலையில், அடுத்ததாக கிழக்கு திசை காற்றின் ஊடுருவல் ஆரம்பித்துவிடும்.
இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அதிகாலை மற்றும் காலையிலும், உள்மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் வருகிற 6-ம் தேதி (சனிக்கிழமை) வரை மழை தொடரும். அதன் பின்னர் சிறிய இடைவெளி ஏற்படும். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். இந்த பருவமழை காலத்தில் டிசம்பர் மாதத்திலும் நல்ல மழை இருக்கிறது” என்று அவர் கூறினார்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம் குறித்த தகவல் வெளியீடு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று கார்த்திகை தீபத்திருவிழா: தி.மலை கிரிவலப்பாதையில் 1,060 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
02 Dec 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
-
டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
02 Dec 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை நீடித்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு விருந்து அளிக்கப்பட்
-
செயல்பாட்டு திறனை மேம்படுத்த 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு
02 Dec 2025புதுடெல்லி : வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அர
-
போதைப்பொருள் கடத்தல்: நடப்பாண்டில் மட்டும் சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
02 Dec 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்கு 22 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 17 பேருக்கு மரண தண்டனை அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03/12/2025
03 Dec 2025 -
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு
03 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு இனி கட்டாயம் : விரைவில் அமல்படுத்த ரயில்வே முடிவு
03 Dec 2025புதுடெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு
03 Dec 2025கொல்கத்தா, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமிமலையில் தேரோட்டம்
03 Dec 2025சுவாமிமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் தேரோட்டம் நடைபெற்றது.
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளார்: சகோதரி உஸ்மா தகவல்
03 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளதாக அவரது சகோதரி உஸ்மா தெரிவித்துள்ளார்.
-
சஞ்சார் சாதி செயலி: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு
03 Dec 2025டெல்லி : சஞ்சார் சாதி செயலியால் மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்
03 Dec 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி தி.மு.க.வில் இணைந்தார்.
-
வாழைப்பழம் சாப்பிட்டபோது விபரீதம்: மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
03 Dec 2025ஈரோடு : ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானில் எச்.ஐ.வி அதிகரிப்பு
03 Dec 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 80 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
வீட்டு வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்
03 Dec 2025சென்னை, வீட்டு வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாயமான மலேசிய விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் பணி வரும் 30-ம் தேதி மீண்டும் தொடக்கம்
03 Dec 2025கோலாலம்பூர் : 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
-
இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை
03 Dec 2025சென்னை : இன்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
ஹாங்காங் தீ விபத்து; பலி 156 ஆக உயர்வு
03 Dec 2025ஹாங்காங் : ஹாங்காங் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.
-
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு திருமணம்
03 Dec 2025காசா : போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
-
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் இன்று இந்தியா வருகிறார்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
03 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷ்யா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக ரஷ்யா அதிபர் புதின், இன்று இந்தியா வருகிறார்.
-
என்னை கொல்ல முயற்சி: பாக்., ராணுவம் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு
03 Dec 2025இஸ்லாமாபாத், என்னை கொல்ல பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களை மீட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை
03 Dec 2025புதுடெல்லி, ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வெனிசுலா மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Dec 2025வாஷிங்டன் வெனிசுலாவுக்குள் புகுந்து விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு
03 Dec 2025சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


